குடியரசுத் துணைத் தலைவர்தான் விதிகளை மீறுகிறார்: கபில்சிபல் கருத்து

1 Min Read

புதுடில்லி, ஜூலை 9- நாடாளுமன்ற விதிகளை மீறுவது எதிர்க்கட்சிகள் அல்ல என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரின் கருத்துக்கு பதிலடி தரும் விதமாக மாநிலங்களவை உறுப்பினர் கபில்சிபல் தெரிவித்தார். பகுதிநேர அரசியல்வாதிகளால் இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களும் நாடாளுமன்ற மாண்பை சீா்குலைத்ததாக மேனாள் ஒன்றிய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு ஜகதீப் தன்கா் கண்டனம் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கபில்சிபல் இவ்வாறு தெரிவித்தார்.

நாடு முழுவதும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இது முழுமையாக விவாதம் செய்யப்படாமல் அமல்படுத்தப்பட்டதாக எதி ர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒன்றிய அரசு தொடா்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், ப.சிதம்பரம் தெரிவித்த கருத்து தொடா்பாக கடந்த 6.7.2024 அன்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய ஜகதீப் தன்கா்,‘ நாடாளுமன்ற உறுப்பினர்களை பகுதிநேர உறுப்பினா்கள் என ஒருவா் கூறுகிறார். இது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களை இழிவுபடுத்தும் தரக்குறைவான இந்தக் கூற்றை அவா் திரும்பப் பெற வேண்டும்’ என்றார். இதற்குப் பதிலடி தரும் விதமாக எக்ஸ் வலைதளத்தில் கபில்சிபல் வெளியிட்ட பதிவில், ‘நாம் அனைவரும் பகுதிநேர உறுப்பினா்கள்தான் என்பதை ஜகதீப் தன்கா் புரிந்துகொள்ள வேண்டும். நாடாளுமன்ற விதிகளை தினத்தோறும் மீறுவது யார்? உறுதியாக நாங்கள் (எதிர்க்கட்சிகள்) அல்ல’ எனக் குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *