குடுமிப்பிடி சண்டை சீட்டுக்குலுக்கிப் போட்டு எதிர்கட்சித்தலைவர் நியமனம்

1 Min Read

கருநாடகாவில் பாஜகவின் பரிதாபம்

பெங்களூரு நவ 19 கருநாடகா வில் சட்டமன்றத் தேர்தல் கடந்த மே மாதம் முடிவுற்றது. மோடியின் பல கிலோமீட்டர் சாலைவழி ஊர் வலம், உள்ளிட்ட பல தந்திரங் களைக் காட்டியும் கருநாடகாவில் பாஜக படுதோல்வி அடைந்தது. கருநாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப் பற்றி வெற்றி வாகை சூடியது. அதா வது 223 தொகுதிகளில் போட்டி யிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள் ளது. கருநாடக முதல மைச்சராக சித்தராமையாவும், துணை முதல மைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப் பட்டனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த பாஜகவில் எதிர்கட்சி தலைவரை தேர்ந் தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. 

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப் படாதது நடந்துகொண்டு இருக்கும் 5 மாநிலத்  தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் சீட்டுக் குலுக்கிப் போட்டதில் கட்சியில் புதிய முகமும் தொகுதியில் கூட பலருக்கு நன்கு அறிமுகம் ஆகாத பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.அசோகா கருநாடகா சட்டமன்ற எதிர்க்கட்சி தலை வராக தேர்வு  செய்யப்பட்டுள் ளார். கருநாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மே மாதம் வெளியான நிலையில், 6 மாதங்கள் கழித்து எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *