குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி உதவி: முதலமைச்சர் அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஜூன் 28- குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு, உதவிகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் நேற்று (27’6’2024) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:
ஜூன் 27 – குறு, சிறு, நடுத்தரதொழில் நிறுவனங்கள் நாள்.

திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பட்டியலினத்தவர், பழங்குடியினர் தொழில் தொடங்க புத்தொழில் நிதி, சந்தைப்படுத்த தேவையான வசதிகள், தமிழ்நாடு தென்னை நார் கொள்கை 2024, தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க கொள்கை 2023 என பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அரசு செயல்படுத்தி வருகிறது.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்னும் பெரும் பங்காற்ற தேவையான ஊக்குவிப்பையும், உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *