ஒன்றிய அமைச்சருக்கு இணையானது எதிர்க்கட்சித் தலைவர் பதவி!

2 Min Read

ராகுலுக்கு அளிக்கப்படும் வசதிகள்

புதுடில்லி, ஜூன் 27 மக்களவைத் தேர்தலில் 99 தொகுதிகள் பெற்ற காங்கிரசுக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தகுதியை காங்கிரஸ் பெற்றுள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி நியமித்தது.
கடந்த 2004 முதல் 20 ஆண்டு அரசியல் வாழ்வில் ராகுலுக்கு முதன்முறையாக அரசமைப்புச் சட்டப் பதவி கிடைத்துள்ளது. இதற்காக அவருக்கு பல்வேறு வசதிகள் கிடைக்க உள்ளன.
எதிர்க்கட்சித் தலைவருக்கு டில்லியில் டைப்-8 குடியிருப்பு கிடைக்கும். இதன் பரப்பளவு 8,250 சதுர அடி ஆகும். தனி வளாகத்தின் நடுவே வெள்ளை மாளிகை போல் அமைந்துள்ள இந்த பங்களாவில் வரவேற்பறை, படுக்கையறைகள் என மொத்தம் 7 பெரிய அறைகள் உள்ளன. இங்கு பணியாற்றும் உதவியாளர்களுக்கு என 4 சிறிய குடியிருப்புகள் வளாகத்தில் உள்ளன. இந்த பங்களாவில் அரசு செலவில் சோபா, மேசை, நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் அளிக்கப்படும். டில்லியில் இந்த அளவிலான ஒரு பங்களாவின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி ஆகும். வாடகை என்றால் பல லட்சம் ஆகும்.

இதுபோன்ற பங்களாவில் ராகுல் வசிப்பது இது புதிதல்ல. இதற்குமுன், அவரது பாட்டி இந்திரா காந்தியின் பிரதமர் இல்லத்தில் ராகுல் தனது சிறு வயதில் வாழ்ந்துள்ளார். பிறகு தனது தந்தை ராஜீவ் காந்தி பிரத மரான போதும் அதில் இருந்தார். ராகுலின் தாய் சோனியா காந்தி வசிக்கும் அரசு பங்களாவும் இதே வகையை சேர்ந்தது.
ரேபரேலி நாடாளுமன்ற உறுப்பி னராகத் தேர்வான ராகுல் வசிக்கும் துக்ளக் சாலை வீடும் இதே டைப்-8 வகை பங்களா எனத் தெரிகிறது. எனினும் இதில் பிற வசதிகள் இல்லாத நிலையில் இதிலேயே அவர் தொடர்வரா அல்லது புதிய இடத்துக்கு மாறுவாரா என்பது இன்னும் முடிவாகவில்லை.

ராகுலின் அரசமைப்புச் சட்டப்படியான பதவியானது, கேபி னட் அமைச்சருக்கு இணையானது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ராகுலுக்கு ரூ.2 லட்சம் மாத ஊதியம் கிடைத்த நிலையில், இனி இது ரூ.3.3 லட்சமாக இருக்கும். இதுதவிர இப்பதவிக்கு என மாதச் செலவுகளும் உண்டு.
எதிர்க்கட்சித் தலைவரான ராகுலுக்கு அரசு சார்பில் 14 உதவியாளர்கள் கிடைப்பார்கள். இருப்பினும் அவருக்கு இதுவரை கிடைத்து வந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான சலுகைகள் கிடைக்காது. எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (ஆண்டுக்கு ரூ.5 கோடி) எதிர்க்கட்சித் தலைவரான ராகுலுக்கும் உண்டு.

கடந்த 10 ஆண்டுகளாக அவையில் தனக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என ராகுல் புகார் கூறி வந்தார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவராகிவிட்ட அவருக்கு இனி அனைத்து விவகா ரங்கள் மற்றும் மசோதாக்கள் மீதான விவாதத்தில் பேசுவதற்கு முக்கிய இடம் அளிக்கப்படும். இந்த சமயங்களில் எதிர்க்கட்சிகளின் குரலாக ஒலிக்கும் பொறுப்பு ராகுலுக்கு உள்ளது.
மக்களவைக்கு 5 ஆவது முறை யாக தேர்வாகியுள்ள ராகுலுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி மிக இளம் வயதில் கிடைத்துள்ளது. லோக்பால் தலைவர், சிபிஅய் இயக்குநர், தேர்தல் ஆணையர், மத்திய தகவல் ஆணையர், தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவி களுக்கான தேர்வுக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பிரதமருடன் ராகுல் இடம்பெறுவார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *