மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கக்கூடாது எதிர்க்கட்சிகள் வேண்டுகோள்

2 Min Read

புதுடில்லி, ஜூன் 27 மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அவையை பார பட்சமின்றி நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாமக்க ளவைத் தொகுதியில் இருந்துபாஜக மக்களவை உறுப்பினராக 3-ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓம்பிர்லா. இவர் கடந்த மக்களவையின் தலைவராக 5 ஆண்டு காலம் பதவி வகித்தார். இந்நிலையில், மக்களவை சபாநாயகராக குரல் ஓட்டெடுப் பின் மூலம் ஓம் பிர்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அழைத்து வந்து மக்களவைத் தலைவர் இருக்கையில் அமர்த்தினர்.

பின்னர் மக்களவை வழக்கப்படி முதலில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்தி பேசினார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: நீங்கள் மக்களவைத் தலைவர் எங்களை (எதிர்க்கட்சி உறுப்பினர்கள்) அவை யில் பேச அனுமதிப்பீர்கள் என்றுஉறுதியாக நம்புகிறேன். அதேநேரத்தில் இந்த அவை எந்தளவுக்கு திறன்மிக்கதாக செயல்படப் போகிறது என்பதுதான் கேள்வி.
இந்தியாவின் குரல் எந்தளவுக்கு இங்கு ஒலிக்கிறது என்பது முக்கியம். எனவே, எதிர்க்கட்சிகளின் குரலை அமைதிப்படுத்தும் செயல் ஜனநாய கத்துக்கு சரியானதல்ல. அரசியலமைப்பை எதிர்க்கட்சிகள் காக்க வேண்டும் என்பதைதான் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் நமக்கு எடுத்துரைத்துள்ளது என்றார்.

அவருக்கு அடுத்து மக்களவை யில் 3-ஆவது பெரிய கட்சியாக உள்ள சமாஜ்வாதி தலைவரும் மக்க ளவை உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் பேசும்போது, ‘‘எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் ஒடுக்கப்பட மாட்டாது என்று எதிர்பார்க்கிறோம். மேலும், எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்களை மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்வது போன்ற நடவடிக்கையும் இருக்காது என்று நம்புகிறேன். அனைத்து உறுப்பி னர்களுக்கும் சமமான மரியாதையை தருவீர்கள் (மக்களவைத் தலைவர்) என்று நம்புகிறேன்’’ என்றார்.

இதேபோல் திரிணமூல் கட்சி மக்களவை உறுப்பினர் சுதீப் பண்டோ பாத்யாயா, திமுக கட்சி மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு உட்பட எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் பலரும் அவையை பாரபட்சமின்றி நடந்த வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
மக்களவைக்கு 2-ஆவது முறை மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாதொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்க ளவை உறுப்பினர் ஓம் பிர்லா, மக்களவைத் தலைவராக நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுவார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *