காவல்துறையினரால் தனக்குப் பாதுகாப்பு இல்லையாம் மேற்குவங்க ஆளுநர் புகார்

0 Min Read

கொல்கத்தா, ஜூன் 21 மேற்கு வங்க ஆளுநா் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மாநில காவல்துறையினரால் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் நேற்று (20.6.2024) குற்றஞ்சாட்டினார்.ஆளுநா் மாளிகையில் இருந்து அனைத்து மாநில காவலா்களும் வெளியேறுமாறு ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் 17.6.2024 அன்று உத்தரவிட்டார். ஆனால், அவா்கள் வெளியேறாமல் பாதுகாப்புப் பணியை தொடா்கின்றனா். உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காவல்துறையின் செயல்பாடுகள், முதலமைச்சர் மற்றும் உள்துறை பொறுப்பையும் வகிக்கும் மம்தாவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *