தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பிஎஃப், பென்ஷன் தொகையை நிர்வாகம் காலதாமதமாக செலுத்தினால் விதிக்கப்படும் அபராத தொகையை கணிசமாக குறைத்து ஓர் அறிவிப்பினை சில நாட்களுக்கு முன்பு (ஜூன் 15ஆம் தேதி) வெளியிட்டுள்ளது.
இரண்டு மாதம் வரை 5%, நான்கு மாதம் வரை 10%, 6 மாதம் வரை 15% அதற்கு மேல் 25% என்றிருந்த அபராதத்தை கடந்த ஜூன் 15ஆம் தேதியிலிருந்து ஒரு மாதம் தவணைத் தவறினால் 1% இரண்டு மாதம் என்றால் 2% என்று அதிகபட்சம் 12 மாதம் 12% என்று குறைத்துள்ளது.
அப்போதுதான் முதலாளிகள் சுலபமாக தொழில் செய்வார்களாம் (Ease of doing business).
ஏற்கெனவே 48 கோடி தகுதி உள்ள தொழிலாளர்களில் 12 கோடி பேருக்கு மட்டுமே பிஎஃப், பென்ஷன் சலுகை உள்ளது. அதையும் நீர்த்துப் போகச் செய்கிறது பாஜக அரசின் இந்த அறிவிப்பு. சி. அய். டி. யு. இதனை வன்மையாக கண்டித்துள்ளது.
தொழிலாளி வர்க்கம் விழித்துக் கொண்டிருக்கிறதா என்பதை அவ்வப்போது சோதித்துக் கொண்டே இருப்பார்கள் கார்ப்பரேட் ஆதரவு ஆட்சியாளர்கள். பாஜக அரசின் இந்த தொழிலாளர் விரோத அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வைக்க எதிர்வினை ஆற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
சமூக ஊடகப்பதிவிலிருந்து…