சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தொலைப்பேசி வழியாக தமிழர் தலைவர் வாழ்த்து

Viduthalai
0 Min Read

அரசியல்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகத் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்தமையைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (28.8.2023) காலை தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் நடைபெறும் பெரியார் மய்யத் திறப்பு விழாவில் தமிழர் தலைவர் அவர்களுடன் பங்கேற்க வருகை தந்திருந்த அமைச்சர் பெருமக்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி, ஆர்.காந்தி ஆகியோரும் தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தொலைப்பேசி வழியாக வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *