பெரியார் பெருந்தொண்டர் சு.அண்ணாமலை மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

viduthalai
1 Min Read

செஞ்சி, ஜூன் 15- சீரிய பகுத்தறிவாளரும், பெரியார் வழி வாழ்ந்த வருமான ஓய்வு பெற்ற நல்லாசிரியர் சு.அண்ணாமலை அவர் கள் 20-ஆண்டுகளுக்கு மேலாக செஞ்சி நகர கழகத் தலைவராக சிறப்புடன் பணியாற்றி தனது 94-ஆம் அக வையில் 9.6.2024 அன்று மறைவுற்றார்.

அன்னாரின் இழப்பு அவரது குடும்பம் மட்டுமின்றி கொள்கை வழி நம் குடும்பத்திற்கும் பேரிழப்பாகும். அன்று மாலை ஆத்திப்பட்டு கிராமத்தில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.

தலைமைக் கழக அமைப்பாளர் தா.இளம் பரிதி தலைமையில் கழகத்தின் சார்பில் அவரது உடலுக்கு கழகக் கொடி போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தா.தம்பி பிரபாகரன், மாவட்ட அமைப்பாளர் சே.வ. கோபண்ணா, மாவட்ட துணைத் தலைவர் க.திருநாவுக்கரசு, செஞ்சி நகர பொறுப்பாளர் தா. நந்தகுமார், திண்டிவனம் மாவட்டத் தலைவர் இர.அன்பழகன், திண்டி வனம் மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் ரமேஷ், செக்கடிக்குப்பம் பகுத்தறிவுப் பாடகர் காத்தவராயன், செஞ்சி ந.கதிரவன் உடனிருந் தனர்.
பெரியார் சாக்ரடீஸ், ஆனந்தன், அரசு ஊழியர், ஆசிரியர் ஓய்வூதியர் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.

அவர் வாழ்விணையர் ஜானகி, மகன் பன்னீர்செல்வம், பெயரன்கள் அறிவுடை நம்பி, அகிலன், அருண் குமார் உள்ளிட்ட குடும் பத்தினருக்கு கழகத்தின் சார்பில் ஆறுதல் தெரி விக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *