ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

19.11.2023

டெக்கான் கிரானிக்கல்,சென்னை

* ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்: நேற்று (18.11.2023) நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களையும் மாலையில் உடனடியாக ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

* அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

தி இந்து

* மசூதி கட்டுவதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த ஹிந்து முன்னேற்றக் கழகத் தலைவர் வழக்குத் தள்ளுபடி. ரூ. 25,000 அபராதம் விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

தி டெலிகிராப்

* ராஜஸ்தான் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பொறியாளரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மலிங்காவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்துவிட்டது. ஆனால் பாஜக அவருக்கு வாய்ப்பு அளித்துள்ளதற்கு கார்கே கடும் கண்டனம்.

* அதானி குழுமத்தின் நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணையை மீண்டும் தொடங்க இந்திய புலனாய்வாளர்கள் முயற்சி.

டைம்ஸ் ஆப் இந்தியா

* பாஜக மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பாவின் இளைய மகன் பி.ஒய்.விஜயேந்திராவை கருநாடகா பாஜகவின் தலைவராக நியமனம் செய்தததற்கு பாஜகவில் கடும் எதிர்ப்பு. இது வாரிசு அரசியல் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் விமர்சனம்.

 – குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *