ஒன்றியத்தில் கூட்டணிக்கு கையேந்தும் பிஜேபி

viduthalai
1 Min Read

சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

மயிலாடுதுறை, ஜூன்.8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் 3ஆவது முறையாக பா.ஜனதா ஆட்சி அமைப்பதாக கூறினாலும், தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் கூட்டணிக்கு கையேந்தும் நிலையை மக்கள் உருவாக்கியுள்ளனர். மோடி தனது சொந்த தொகுதியில் பல லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார்.

அவருக்கு மக்கள் உரிய பாடம் புகட்டி இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பா.ஜனதாவின் மோசமான நடவடிக்கைகளை எதிர்த்து எதிர்க்கட்சி சார்பில் போராடுவதற்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 234 உறுப்பினர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் 40 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று இந்திய அரசியலில் தீர்மானகரமான பங்கினை வகிக்கக் கூடிய அளவிற்கு தமிழ்நாடு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜனதா ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை. கேரளாவில் பா.ஜனதா எதிர்பார்த்தது நடக்கவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி. கேரளாவில் பா.ஜனதா படுதோல்வி அடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
-இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *