பெரியார் பன்னாட்டு அமைப்பு – அமெரிக்கா சார்பில் சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா!

Viduthalai
1 Min Read

பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரை

அமெரிக்கா பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் 1.6.2024 காலை 10 மணி அளவில் சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் ‘மானம் காத்த சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ்’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன், டாக்டர் சரோஜா இளங்கோவன், நியூ ஜெர்சி இளமாறன், சிக்காகோ விஜய் சாந்தலிங்கம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில அமைப்பாளர் வா. நேரு, சிதம்பரம் ஆறு கலைச்செல்வன், மும்பை கணேசன், தீபப்பிரியா, பெரியசாமி, கனடா ஆசிப் ரஜினிகாந்த், எழில் வடிவன் கலைவாணன், அறிவு பொன்னி, கலைச்செல்வி ,கே. என் .பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர் .கார்த்திகா ஜெகதீஸ்வரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

நிகழ்வில் பலரும் பங்கேற்று பயன் துய்த்தனர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கத்தால் தமிழர்கள் அடைந்த பயன்கள் மற்றும் குடிஅரசு, திராவிடன், விடுதலை போன்ற ஏடுகள் ஏற்படுத்திய புரட்சிகர மாற்றம், சிந்தனை புரட்சி பற்றிய விழிப்புணர்வூட்டும் விளக்கம் அளிக்கும் நிகழ்வாக இந்நிகழ்ச்சி அமைந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *