கோவை சுப்புவின் பணியை பாராட்டி குறிப்பேட்டில் தமிழர் தலைவர்

1 Min Read

 

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவையொட்டி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் ஒளிப்படக் கலைஞர் கோவை சுப்பு, தான் ஒருங்கிணைத்த ஒளிப்படக் கண்காட்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குச் சால்வை அணிவித்தும், கலைஞர் படம் வழங்கியும் வரவேற்றார். ஏராளமான படங்களுடன் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த கலைஞர் ஒளிப்படக் கண்காட்சியைச் சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்து பார்வையிட்டார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. வரலாற்றுச் சிறப்புமிக்க ஒளிப்படங்களை மிகச் சிறப்பாக தொகுத்திருந்த ஒளிப்படக் கலைஞர் கோவை சுப்பு அவர்களைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சால்வை அணிவித்தும் புத்தகம் வழங்கியும் பாராட்டுத் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *