ராகுல் தான் பிரதமர்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேட்டி

1 Min Read

புதுடில்லி. ஜூன் 1 ராகுல் காந்திதான் பிரதமராக
வேண்டும் என்பது எனது விருப்பம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். மேலும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிடாததால் அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று விரும்பியதாகவும் அவர் கூறினார்.

மக்களவைத் தேர்தல் இன்றுடன் (1.6.2024) முடிகிறது. இறுதி கட்ட மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஒன்றியத்தில் ஆளும் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க முடியும் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன. ஆனாலும் இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யவே பெரும் குழப்பம் ஏற்படும் என்றும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஆண்டுக்கு ஒரு பிரதமர் இருப்பார் என்றும் பாஜக விமர்சித்து வருகிறது.

இந்தியா கூட்டணி கட்சிகளும் பிரதமர் வேட்பாளர் யார் என்பது பற்றி எதுவும் அறிவிக்காததை சுட்டிக்காட்டி பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் தான், ராகுல் காந்திதான் பிரதமர் என்பது எனது விருப்பமாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-

ராகுல் காந்தி இரண்டு முறை நடைப் பயணத்தை முன்னின்று நடத்தியுள்ளார். ராகுல் காந்திதான் பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பமாகும். இளைஞர்களின் பிரதிநிதியாக அவர் இருக்கிறார். பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று நான் விரும்பினேன். ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிடாத தால் அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று விரும்பினேன். ஆனாலும் பிரியங்கா காந்திக்கு ராகுல் காந்தியின் பிரச்சாரப் பயணத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்ததால் அவர் போட்டியிடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *