படிப்பவர்களுக்கு விடுதலை வழங்கிய மதுரை புரவலர்கள்

1 Min Read

மதுரையைச் சேர்ந்த முத்து மசாலா நிறுவனத்தின் உரிமையாளரும் கழகத் தோழருமான முத்து மற்றும் பெரியார் பற்றாளரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி பணி நிறைவு பெற்றவருமான லோகராஜன் ஆகியோர் மதுரை மீனாட்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் சர்க்கரைச் செட்டியார் நினைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி படிப்பகம் அதுபோல ஜெய்ஹிந்துபுரத்தில்‌ இயங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் படிப்பகத்திற்கும் இரண்டு விடுதலை ஆண்டு சந்தாவாக ரூ.4000த்தை வழங்கினர். முத்துமசாலா உரிமையாளர் தோழர் முத்து கூறும் போது நான் நாள்தோறும் மாலையில் இணைய வழியாக விடுதலையை படித்து விடுவேன். இருந்தாலும் நான் வழங்கும் நன்கொடை மூலமாக படிப்பகத்தில் மக்கள் படிக்க பயன்படட்டும் என்று கூறினார். அதுபோல் லோகராஜனும் படிப்பகம் சென்றால் எண்ணற்ற பேருக்கு பயன்படும் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *