காஷ்மீரி பார்ப்பன பண்டிதர்கள் வாக்களிக்க 34 மய்யங்கள் ஏற்பாடாம்!

Viduthalai
1 Min Read

ஜம்மு, மே 25- ஜம்மு காஷ்மீரில், காஷ்மீரி பண்டிட் இனக்குழுவை சேர்ந்தவர்கள் கலவரம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடி யேறி வசித்து வருகிறார்கள். தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறு வதையொட்டி, புலம்பெயர்த்த காஷ்மீரி பண்டிட்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜம்முவின் அனந்த்நாக் நாடாளு மன்ற தொகுதிக்கு இன்று (25.5.2024) 6ஆம் கட்ட தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதியில் புலம்பெயர்ந்த 26 ஆயிரம் காஷ்மீரி பண்டிட்கள், வாக்காளர் பட்டியலில் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க ஏதுவாக, 34 சிறப்பு மய்யங்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 4 முகாம்கள் டில்லி யிலும் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஜம்முவில் உள்ள மற்ற 4 தொகுதிகளுக்கு ஏற்கெனவே வாக்குப் பதிவு நடந்து முடிந்துவிட்டது.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *