பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டங்கள்: விவசாயிகள் கருப்புக் கொடி போராட்ட அறிவிப்பு

2 Min Read

அரியானா, மே 23 கடந்த 2020இல் போராட்டம் நடத்தியது போன்று, குறைந்தபட்ச ஆதார விலை உள் ளிட்ட 13 கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி கடந்த மார்ச் மாதம் முதல் விவசாயிகள் மீண்டும் இரண் டாம் கட்டப் போரா ட்டத்தை டில்லி எல்லையில் தொடங்கினர். 2020-2021 இல் நடத்தப்பட்ட தாக்குதல் (800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்) போன்று இரண்டாம் கட்டப் போராட்டத்திலும் விவசாயி கள் மீது மோடி அரசு தாக்குதல் நடத் தியது. இந்தக் கொடூர தாக்குதலில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். பல நூறு விவசாயிகள் காயமடைந்தனர். காயமடைந்த விவசாயிகளை மருத் துவமனையில் அனுமதிக்க, விவசா யிகள் பெரும்பாலானோர் டில்லி எல்லையை விட்டு நகர்ந்தனர். இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மோடி அரசு, அரியானா பாஜக அரசுடன் இணைந்து மீண்டும் விவசாயிகள் போராட முடியாமல் கண்காணிப்பை தீவிரப்படுத்தி டில்லி எல்லையை தடுப்புகளால் அன்றி பாதுகாப்பு கட்டமைப்பி லேயே மூடியது.
இதனால் பஞ்சாப் விவசாயிகள் டில்லி – அரியானா எல்லைப் பகுதி யான ஷம்பூ எல்லையில் 3 மாதத் திற்கு மேலாகப் போராடி வருகின்ற னர். இந்நிலையில், ஷம்பூ எல்லை யின் விவசாயிகளின் போராட்டம் இன்றோடு (23.5.2024) 100ஆவது நாளை எட்டுகிறது.

மோடியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு சிக்கல்
100ஆவது நாளில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தவிருப்ப தாக ஏற்கெனவே விவசாயிகள் அறிவித்த நிலையில், அதே நாளில் (மே 23) பஞ்சாப் மாநிலத்தில் (மே 23 – பாட்டியாலா, மே 24 – குர்தாஸ் பூர் மற்றும் ஜலந்தர்) மக்களவை பிரச்சாரத்தை பிரதமர் மோடி துவங் குகிறார். இதனை அறிந்த விவசாயி கள் 100ஆவது போராட்ட நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி பங்கேற் கும் பிரச்சாரக் கூட்டங்களில் கருப் புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிரச் சார நேரமான 2022 ஜனவரி 5 அன்று பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி ஹுசைனிவாலா (பஞ்சாப் எல்லை) என்ற இடத்தில் விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதால், வந்த வழியிலேயே திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று. இந்நிகழ்வு போன்று விவசாயிகளின் 100ஆவது நாள் போராட்டமும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற அதிர்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக வினர் உறைந்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *