சிலந்தி ஆற்றில் தடுப்பணை: கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி!

Viduthalai
0 Min Read

இடுக்கி மாவட்டம், தேவிகுளம் வட்டம் பெருகுடா என்ற இடத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என கேரள அரசுக்கு கேள்வியெழுப்பி உள்ளது பசுமைத் தீர்ப்பாயம். செய்தித் தாள்களில் வந்த தகவல்களின் அடிப்படையில் தாமாக முன்வந்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டுள்ளது. சுற்றுச்சூழல், தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்றும், அப்படி அனுமதி பெறவில்லை என்றால், உடனடியாக அணை கட்டுவதை நிறுத்தவேண்டும் என்றும் கேரள அரசுக்குப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *