உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை பட்டப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 7

viduthalai
1 Min Read

சென்னை, மே 21- சென்னை தரமணியில் இயங்கும் உலகத் தமி ழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு மாண வர் சேர்க்கைக்கு விண்ணப்பிக் கலாம் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சி இயக்குநரகம் நேற்று (20.5.2024) வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ், தமிழ்மொழி வளர்ச்சிக் கெனத் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமி ழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரு கின்றன.

தமிழ்ப் பல்கலைக்கழக ஏற் புடன், தமிழ் முதுகலை பட்டப் படிப்பு (எம்ஏ தமிழ்) மற்றும் அய்ந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தமிழ் முனைவர் பட்ட வகுப்பு (பிஎச்டி) ஆகியன இந் நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகிறது.

2024-2025ஆம் கல்வியாண்டில் தற்போது அய்ந்தாண்டு ஒருங்கி ணைந்த தமிழ் முதுகலை பட்ட வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த படிப்பில் பயில விரும் புவோர் சேர்க்கை தொடர்பான விதிமுறைகள், தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தைwww.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

இருபாலருக்கெனத் தனித் தனியே கட்டணம் இல்லா தங்கும் விடுதி வசதி உண்டு. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரில் (அ) அஞ்சலில் இறுதியாக படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் (சான்றொப்ப மிடப்பட்டது) நகலுடன் இணைத்து இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மய்யத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைப்பேசி 044-22542992) என்ற முகவரியில் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதிக்குள் அளித்தல் வேண்டும்.

மேலும் தகவல் பெற மேற் காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது நிறுவன வலைத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *