கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

20.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* உ.பியில் ஒரு இடத்தில் தான் பாஜக வெல்லும், அலகாபாத் தேர்தல் பரப்புரையில் ராகுல் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வெறுப்பை பரப்பும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் கடிதம்.
தி டெலிகிராப்:
* இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பின்மை விகிதத்திற்கு நரேந்திர மோடி அரசாங்கத்தை குற்றம் சாட்டும் இளைஞர்கள், வெளி நாடுகளுக்கு கள்ளத்தனமாக செல்வது அதிகரித்து உள்ளதாக அரியானாவில் மக்கள் கவலை.
தி இந்து:
* பணவீக்கம், வேலையின்மை ஆகியவை கிழக்கு உ.பி.யில் பாஜகவுக்கு எதிராக உள்ளது. மோடியின் பிம்பம் இறங்குமுகத்தில் உள்ளதாக கவலை.
* பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் தரும் மகாலட்சுமி திட்டத்தை விளம்பரப்படுத்த காங்கிரஸ் 40 லட்சம் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க உள்ளது
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *