8.9.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉ஜி-20 மாநாடு கொண்டாடும் அதே வேளையில், பற்றி எரியும் மணிப்பூர் இனப் படுகொலையை உதாசீனப் படுத்தக் கூடாது என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
👉அமைச்சர் உதயநிதி பேச்சின் முழு விவரம் அறியாமல் பேசுவதா? மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்ட னம்: அரசியல் செய்ய நினைத்தால் அந்தப் புதைகுழியில் பா.ஜ.தான் மூழ்கும் என எச்சரிக்கை
👉உ.பி. சாமியார் மீது வழக்கு தொடுப்பது, போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்காதீர், திமுக தொண்டர்களுக்கு உதயநிதி அறிவுரை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 பாஜக தலைவர்கள் சனாதன தர்மத்தை விவாதப் பொருளாக மாற்றத் தயாராக இருந்தால், அவர்கள் அம் பலமாகி விடுவார்கள், இறுதியில், அவர்கள் பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள் என பீகார் ஆர்ஜேடி தலைவர் ஜகதானந்த் சிங் எச்சரிக்கை.
தி டெலிகிராப்:
👉 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என்பது சரியல்ல; 4.5 சதவீதமாக தான் இருக்க முடியும் என்கிறார் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் அசோகா மோடி.
👉இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசி வந்த ஆர்.எஸ்.எஸ். தற்போது அரசமைப்புச் சட்டப்படி வழங்கப் படும் இட ஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கிறோம் என பல்டி அடிக்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.
👉 மனிதர்கள் ஒருவரையொருவர் நேசிப்பதற்காகவே மதம் இருக்கிறது, ஒருவரையொருவர் வெறுப்பதற்காக அல்ல என்கிறார் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா
👉 கருநாடக அய்டி அமைச்சர் பிரியங்க் கார்கே, சனாதன தர்மத்தில் உள்ளார்ந்த ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிராக குரல் எழுப்பி, அது ஒரு நோயைப் போன்றது என்று கூறினார்.
– குடந்தை கருணா