இப்பொழுது மட்டுமல்ல, அடுத்த 10 ஆண்டுகளிலும் ஒடிசாவில் பிஜேபியால் வெல்ல முடியாது! பிரதமர் மோடிக்கு பட்நாயக் பதிலடி

2 Min Read

புவனேசுவரம், மே13- பாஜக வால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒடிசாவில் வெல்ல முடியாது என்று ஒடிசா முதலமைச்சரும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் நேற்று (12.5.2024) தெரிவித்தார்.
முன்னதாக, ஒடிசா மாநிலம் புல்பானி நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந் திர மோடி, “ஒடிசா மாநிலம் எல்லா வளமும் மிகுந்த மாநிலம். குஜராத்தைவிட 100 மடங்கு வலிமைமிக்கது. ஆனால், வளர்ச் சியில் அது மிகவும் பின்தங்கி இருக்கிறது. காங்கிரசும் பிஜேடி யும்தான் காரணம். என்னால் அய்ந்தே ஆண்டுகளில் ஒடி சாவை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்ட முடியும்.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கால் கையில் காகிதம் இல்லாமல் ஒடிசாவின் மாநிலங் களின் பெயரைக் கூட சொல்ல முடியாது. ஒடிசாவின் பண்பாட் டையும் பாரம்பரியத்தையும் அறிந்த ஒருவரே அங்கு ஆட்சி செய்ய வேண்டும். ஜூன் 10-ஆம் தேதி பாஜகவைச் சேர்ந்த முதல மைச்சர் ஒடிசாவில் பதவி ஏற் பார்” என்று பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் வித மாக நவீன் பட்நாயக் காட்சிப் பதிவு பதிவொன்றை நேற்று (12.4.2024) வெளியிட்டார். அதில் அவர், “அடுத்த 10 ஆண்டு களுக்கு பாஜகவால் ஒடிசாவில் வெல்ல முடியாது. மோடிக்கு தேர்தல் சமயத்தில் மட்டும்தான் ஒடிசா குறித்து நினைவு வரும்.

2014, 2019 தேர்தல்களில் தான் கொடுத்த வாக்குறுதியை பிரதமர் மோடி மறந்துவிட்டார். ஒடிசாவின் மொழி, பண்பாடு குறித்து அவருக்கு எந்த அக் கறையும் கிடையாது. சம்ஸ்கிருத மொழிக்கு ரூ.1,000 கோடி ஒதுக் கிய அவர், ஒடியா மொழிக்கு எதுவும் ஒதுக்கவில்லை. ஒடிசா ஆளுமை யாருக்கும் ‘பாரத ரத்னா’ வழங்கப்படவில்லை. விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்துவேன், 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்குவேன் என் றெல்லாம் வாக்குறுதி அளித் தார். எதையும் நிறைவேற்ற வில்லை.
ஒடிசா மக்களுக்கு பிஜே டியை பற்றி தெரியும். அவர்கள் 6-ஆவது முறையாக பிஜேடியை ஆட்சியில் அமர்த்துவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *