காஷ்மீர் இஸ்லாமியர்களின் பெருந்தன்மை! இந்து கோயிலுக்கு சாலை அமைக்க நிலத்தை கொடையாக வழங்கினர்

1 Min Read

ரியாசி, மே 12 ஜம்மு காஷ்மீரில் 500 ஆண்டு பாரம்பரியமிக்க இந்து கோயிலுக்கு முறையான பாதை அமைப்பதற்கு இரண்டு முஸ்லிம்கள் தங்கள் சொந்த நிலத்தை கொடையாக கொடுத்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் கேரல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் குப்த் காஷி கவுரி சங்கர் கோயில் அமைந்துள்ளது. 500 ஆண்டு பாரம் பரியமிக்க இந்த கோயிலுக்கு முறையான சாலை வசதி இல்லை. இந்நிலையில், அந்தக் கோயிலுக்கு செல்வதற்கான பாதை அமைப்பதற்காக குலாம் ரசூல் மற்றும் குலாம் முகமது ஆகிய இரு முஸ்லிம்கள் தங்களுக்கு சொந்தமான ரூ.1 கோடிமதிப்பிலான நிலத்தை கொடையாக வழங்கியுள்ளனர்.
இது குறித்து குலாம் ரசூல் கூறுகையில், “500 ஆண்டு பாரம்பரிய கோயிலுக்கு செல்ல நல்ல பாதை இல்லை. இதை வைத்து சிலர் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மத ரீதியான பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இந்தப்பிளவைத் தடுத்து மத நல்லிணக்கத்தை நிலைநிறுத்தும் நோக்கில் எங்கள் நிலங்களை தானமாக வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்தார். கேரல் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் வருவாய் அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய கூட்டத்தில், குலாம் ரசூலும் குலாம் முகம்மதும் தங்கள் நிலங்களை வழங்கினர். இந்த நிலத்தில் 1200 மீட்டர் நீளம் மற்றும் 10 அடி அகலத்தில் சாலை அமைக்கப்படும் என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *