இந்நாள்

1 Min Read

மதுரைக் கறுப்புச் சட்டைப் படை மாநில மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்ட நாள் (11..5.1946) அப்பொழுது தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
மதுரையைப் போல் இன்னும் பல தொல்லைகளை நாம் அனுபவிக்க நேரிடும். அந்த அனுபவத்தின் மூலம் தான் நாம் மனிதத் தன்மை பெற்று திரா விடத்தைப் பெறப் போகிறோம். ஆகவே நாம் செய்ய வேண்டியது – யாவரும் கறுப்புச் சட்டை அணிய வேண்டும். எங்கும் கறுப்புக் கொடி பறக்க வேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும் உடையிலும் கறுப்புக்கொடி சின்னம் துலங்க வேண்டும்.
இந்தக் காரியம் தான் நாம் மதுரையைக் கண்டு பயந்தோமா, துணிவும் வீரமும் கொண்டோமா என்பதை உறுதிப்படுத்தும்.

– – – – –

மற்றவை

புலவர் குழந்தையின் இராவண காவியம் தடை நீக்கம் நாள்
இராவண காவியம் சென்னை மாநில ஆட்சியால் 2.6.1948 அன்று தடை செய்யப் பட்டது. 1971ஆம் ஆண்டு மே 11 அன்று முத்தமிழர் அறிஞர் கலைஞர் தலைமை யிலான ஆட்சியால் தடை நீக்கப்பட்டது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிறப்பு பாயிரம்
“பாவண மல்குமி ராவண காவியம் ”
நாவண மல்கிய நல்லா சிரியனும்,
நல்மலி ஓல வலசுவாழ் முத்துச்
சாமிசின் னம்மை காமுறு செல்வ
மைந்தனும், ஆய செந்தமிழ்க் குழந்தை
செப்பினான்; அறிவுல கொப்பு மாறே!
இராவண காவியம் எனுமிது தமிழகத்
திராவிடம் இலையெனத் திராவிடர் புரிக,
ஆக்கியோன் குழந்தையும், போக்கறு பனுவலும்
ஆழிசூ ழுலகில் என்றும்
வாழிய நன்றே வாழிய நன்றே.

– பாரதிதாசன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *