நீதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரம் வழுதரெட்டியில் ஆக்கிரமிப்பு கோயில் இடிப்பு

Viduthalai
1 Min Read

விழுப்புரம், மே 3- விழுப்புரம் வழுத ரெட்டி சுடுகாட்டு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அங்காளம்மன் கோயில் மண் டபம் நீதிமன்ற உத்தரவின்பேரில் 1.5.2024 அன்று காலை நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட் டது.
கோயிலை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத் தினர். இதனால் பரபரப்பு ஏற் பட்டது. விழுப்புரம் வழுத ரெட்டி காலனி பகுதியில் சுடு காடு உள்ளது.
இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து ஒரு கான்கிரீட் வீடு உள்பட 8 வீடுகளும் மற்றும் ஒரு அங்காளம்மன் கோயிலும் கட் டப்பட்டுள்ளது. நகராட்சிக்கு சொந்தமான இந்த சுடுகாடு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சுடு காடு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து ஆக்கிர மிப்பை அகற்றும் பணி கடந்த 20 நாட்களுக்கு முன் நடந்தது. அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் காவல்துறையினர் தடுத்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன், விழுப் புரம் நகரமைப்பு அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலு வலர்கள் மேற்பார்வையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட் டன. வழுதரெட்டி காலனி தந்தை பெரியார் தெருவில் இருந்த 2 கூரை வீடுகள், ஆளில் லாத வீடு ஆகியவை அகற்றப் பட்டன. மற்ற வீடுகளை அகற்ற முற்பட்டபோது பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் 15 நாட்கள் அவ காசம் கேட்டதால், அதிகாரிகள் சென்றனர்.

இந்த அவகாசம் முடிந்த நிலையில் 1.5.2024 அன்று காலை 7 மணிக்கு விழுப்புரம் நகராட்சி அதிகாரிகள் வந்தனர். 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் சுடுகாட்டு ஆக்கிரமிப்பு பகுதியில் அமைந்திருந்த அங் காளம்மன் கோயில் அருகே பெரியாயி அம்மன் உருவ பொம்மை வைத்திருந்த மண்ட பத்தை பொக்லைன் உதவியுடன் இடித்து அப்புறப்படுத்தினர். சுற்றுச்சுவர்களும் இடிக்கப்பட் டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *