90 அய்.ஏ.எஸ்.கள் நாட்டை ஆள்கிறார்கள்; அதில் வெறும் 3 பேர் தான் ஓபிசி, மற்றவர்கள் எங்கே?

Viduthalai
3 Min Read

ராகுல் காந்தி கேள்வி

பதான்,ஏப்.30 90 அய்.ஏ.எஸ்.கள் நாட்டை ஆள்கிறார்கள்; அதில் வெறும் 3 பேர் தான் ஓபிசி, மற்றவர்கள் எங்கே? என்று காங்கிரஸ் முன்னணி தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
குஜராத் மாநிலம் பதான் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டி யிடும் வேட்பாளர் சந்தன்ஜி தாக்கூரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னணி தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி உரையாற்றினார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “டில்லியில் இருந்து இந்திய அரசை நடத்துபவர்கள் 90 அய்ஏஎஸ் அதிகாரிகள். இந்த 90 அய்ஏஎஸ் அதிகாரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அய்ஏஎஸ் அதிகாரிகள் மூன்று பேர் மட்டுமே உள்ளனர். அவர்களையும் சிறிய துறைகளில் பொறுப்பு கொடுத்து ஒரு மூலையில் உட்கார வைத்துள்ளனர்.
நிதி அமைச்சகத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பு அய்.ஏ.எஸ். அதிகாரி கூட இல்லை. முக்கியமான அமைச்சகங்களில் ஓபிசி பிரி வினர் யாருமே இல்லை. அவர்கள்தான் பட் ஜெட்டில் ஒவ்வொரு ரூபாயையும் பகிர்ந்து அளிக்கிறார்கள். 3 ஓபிசி, 3 தாழ்த்தப்பட்டோர், ஒரு ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உள்ளனர். இந்தியாவின் பட் ஜெட்டை பார்த்தால் ஒவ்வொரு 100 ரூபாயில் 6 ரூபாய் 10 பைசா மட்டுமே ஓபிசி பிரிவினர், தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த அதி காரிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

இந்தி யாவில் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி. மக்களின் எண்ணிக்கை 90 சதவீதம். ஆனால், உங்கள் பங்கு நூற்றில் வெறும் 6 ரூபாய் 10 பைசா தான். டில்லியில் இருக்கும் அய்ஏஎஸ் அதிகாரிகள் தான் பட்ஜெட் நிதியை விநியோகிக்கிறார்கள். குஜராத்துக்கு எவ்வளவு பணம் செல்கிறது, புல்லட் ரயிலுக்கு எவ்வளவு செல்கிறது, அக்னிவீர் திட்டம் நடக்குமா நடக்காதா? தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி உதவித்தொகை எவ் வளவு வழங்கப்படும், எத்தனை சாலைகள் அமைக்கப்படும்? எங்கெங்கு அமைக்கப்படும்? உட்கட்டமைப்புக்கு எவ்வளவு பணம் செல்லும் என அனைத்து முடிவுகளும் இந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளால் தான் எடுக்கப்படுகின்றன.
என் கேள்வி என்னவென்றால், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 90 சதவீதம் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மக்கள் உள் ளனர்.

ஆனால் அவர்கள் கார்ப்பரேட்டில் இல்லை, மீடியாவில் இல்லை, தனியார் மருத்துவமனைகளை நடத்தவில்லை, தனி யார் பல்கலைக்கழகங்களை நடத்தவில்லை, அரசு உயர் பதவிகளில் இல்லை.
அப்படி என்றால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? விவசாயிகள், தொழிலாளர் கள், வேலையற்ற இளைஞர்கள், சிறு வணிக உரிமையாளர்களாக இருக்கிறார்கள். எங்கும் அவர்களுககு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு முதலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவோம். அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு ஆளும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் திட்டமிடுகின்றன. இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக அவர்கள் உள்ளனர்” என ஆவேசமாகப் பேசியுள்ளார் ராகுல் காந்தி.
நாட்டில் 2 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் 190 தொகுதிகளுக்கு நிறைவடைந் துள்ள நிலையில் 3 ஆவது கட்ட வாக் குப்பதிவு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் குஜராத் மாநிலத்தில்தான் அதிக தொகுதிகளில் வாக் குப்பதிவு நடைபெற உள்ளது. இந் நிலையில், குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *