மீண்டும் மீண்டும் பிஜேபி சிக்குகிறது கருநாடகா பிஜேபி வேட்பாளரிடம் ரூபாய் 4.8 கோடி பறிமுதல்

1 Min Read

பெங்களுரு, ஏப். 27- கருநாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூரில் பாஜக வேட்பாளரும் மேனாள் அமைச்சருமான சுதாகர் வாக்கா ளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரி முனிஷ் மவுத்கிலுக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது.
இதையடுத்து தேர்தல் அதி காரிகள் சுதாகரின் பண்ணை வீட் டில் சோதனை நடத்திய போது, ரூ.4.8 கோடி ரொக்கம் சிக்கியது. மேலும் சுதாகர் மீது மதநாயக்க ஹள்ளி காவல் துறையினர் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து வருமான வரித் துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட தாக தேர்தல் அதிகாரி முனிஷ் மவுத்கில் தெரிவித்தார்.
இதனிடையே பெங்களூரு தெற்கு தொகுதியின் பாஜக வேட் பாளர் தேஜஸ்வி சூர்யா நேற்று (26.4.2024) தனது எக்ஸ் பக்கத்தில் வாக்காளர்களிடம் வாக்கு கேட் கும் விதமாக காட்சிப் பதிவை வெளியிட்டார்.
அந்த காட்சிப் பதிவு மத ரீதியாக தூண்டிவிட்டு, வாக்கு களை அறுவடை செய்யும் விதமாக இருப்பதாக காங்கிரஸ் வேட் பாளர் சவும்யா ரெட்டி புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் தேர்தல் ஆணையம் தேஜஸ்வி சூர்யா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும் அந்த சர்ச்சைக்குரிய காட்சிப் பதிவை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *