பேராசிரியர் மல்லிகாவின் ஆற்றல் எளிதில் அளவிட முடியாத ஒன்று!
உலகளாவிய முறைதான் சுயமரியாதை மண முறை!
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கிற முதல் உரிமை யாருக்கு?
மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து!
தஞ்சை, ஏப்.26 பேராசிரியர் மல்லிகாவின் ஆற்றல் எளிதில் அளவிட முடியாத ஒன்று என்றும், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கிற முதல் உரிமை யாருக்கு என்று கேள்வி எழுப்பி, உலகளாவிய முறைதான் சுய மரியாதை மண முறை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கின் முதல்வர் மல்லிகா இல்ல மணவிழா வரவேற்பு
கடந்த 24.4.2024 அன்று மாலை 7 மணியளவில், தஞ்சையில் நடைபெற்ற தஞ்சை, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கின் முதல்வர் மல்லிகா இல்ல மணவிழா வரவேற்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
மணமக்கள் பிரசாத் – சுவேதிகா தமிழர் தலைவரிடம் நன்கொடை
மணமக்கள் பிரசாந்த் – சுவேதிகா குடும்பத்தின் சார்பில், பெரியார் உலகத்திற்கு ரூ.10 ஆயிரமும், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.10 ஆயிரமும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நன்கொடையாக வழங்கப்பட்டது
அவரது வாழ்த்துரை வருமாறு:
கல்வி உறவுகளே, இயக்க உறவுகளே
வருக! வருக!
மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் நடைபெறக்கூடிய அன்புச் செல்வர்கள் சுவாதிகா – பிரசாந்த் ஆகியோரு டைய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்வு முடிந்து, மணவிழா வரவேற்பு விழா என்கிற பெருமைக்குரிய, சிறப்புக்குரிய, மகிழ்ச்சிக்குரிய இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள அத்துணை பெரியோர்களையும், தாய்மார் களையும், உற்றார் உறவினர்களையும், கல்வி உறவு களையும், இயக்க உறவுகளையும் அன்போடு வருக, வருக, வருகவென்று, நான் வரவேற்கின்ற வரவேற்புரை யாகவே என்னுரையை அமைத்துக் கொள்கிறேன்.
காரணம், இங்கே அன்பு மகள் பேராசிரியர் டாக்டர் மல்லிகா அவர்கள் சொன்னதைப்போல, இந்தக் குடும் பம் நம்முடைய குடும்பம்; இன்னுங்கேட்டால், சற்று அழுத்தமாகச் சொல்லவேண்டுமானால், இது எங்களு டைய குடும்பம் என்ற உறவோடும், உரிமையோடும் கலந்துகொள்கிறோம் என்று அவர்கள் சொன்னார்கள்.
நிகழ்விற்கு வருகின்றவர்களை
வரவேற்பதுதான் முதல் வேலை!
பொதுவாக, குடும்பத்திற்குரிய தலைவர் என்று என்னை அடையாளப்படுத்திச் சொன்னார். அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்வு நடக்கிறது. நம்மு டைய அருமைச் செல்வங்கள் பிரசாந்த் அவர்களா னாலும், சுவாதிகா அவர்களானாலும் இரண்டு பேரும் மகிழ்ச்சியோடு வாழ்க்கை இணையேற்பு விழாவினை ஏற்றுள்ள நிலையில், அவர்களை நாம் மகிழ்ச்சியோடு வாழ்த்திக் கொண்டிருக்கின்ற இந்த மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில், இந்தக் குடும்பத்தின் தலைவனுக்கு என்ன வேலை என்றால், வருகின்றவர்களை வரவேற்பதுதான் முதல் வேலை.
அந்த வகையில், உங்கள் அனைவரையும் வருக, வருக என்று நான் வரவேற்கக் கடமைப்பட்டு இருக் கின்றேன்.
ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம்;
ஒரு பண்பாட்டுப் பல்கலைக் கழகம்!
இது ஒரு நல்ல குடும்பம்; ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம்; ஒரு பண்பாட்டுப் பல்கலைக் கழகம்.
இந்தக் குடும்பத்தில் இரண்டு செல்வங்கள்; பேரப் பிள்ளைகள் என்று இருந்தாலும், பேத்திகளாக இருக்கக் கூடியவர்கள் – படிக்கின்ற காலத்தில், சிறு பிள்ளைகளாக வளர்ந்த காலத்திலிருந்து, நானும், என்னுடைய வாழ் விணையர் திருமதி மோகனா அவர்களும் அறிவோம்.
இங்கே மோகனா அவர்களைப்பற்றி சொன்னார்கள்; என்னைவிட அதிகமான அக்கறை அவருக்கு அதிகம். தாய் – பிள்ளை உறவு என்பது எப்படி என்றால், பொதுவாக, பெண் பிள்ளைகள், தந்தையிடம் மிகப் பிரியமாக இருப்பார்கள்; ஆண் பிள்ளைகளைவிட, பெண் பிள்ளைகள் ஒருபடி மேலேதான் இருப்பார்கள். ஆனால், அதேநேரத்தில், அதில் பேதம் கிடையாது.
அந்த வகையில் பார்க்கும்பொழுது, மல்லிகா அவர் கள், எங்கள் குடும்பத்தினரோடு மிகவும் பாசத்தோடு இருப்பார்கள். இரண்டு குடும்பமும் ஒரு குடும்பம் என்கிற உணர்வில் இணைக்கப்பட்ட சூழ்நிலை கொண்டது.
மோகனா அவர்கள் இங்கே வருவதற்கு ஆயத்த மானார்கள்; ஆ£னல், தவிர்க்க முடியாத காரணத்தினால், சற்று உடல்நிலை குறைவினால் வர இயலாத நிலை.
மகளை, அப்பா பாராட்டுவது என்பது சம்பிரதாயம்தான்!
மல்லிகா அவர்களை, அதாவது மகளை, அப்பா பாராட்டுவது என்பது இருக்கிறதே, அது சடங்கு, சம்பிரதாயம்தான்.
நாங்கள் எப்படி சந்தித்தோம்? எப்படி இந்த உறவு ஏற்பட்டது? என்பதை பிறகு எடுத்துச் சொல்கிறேன்.
மகிழ்ச்சியாக செய்யவேண்டிய விஷயம் என்ன வென்றால், பாராட்டப்படவேண்டியது முழுக்க முழுக்க மல்லிகா அவர்களுடைய சம்பந்திகளைத்தான். சம்பந்தி அய்யா பன்னீர்செல்வம் – விஜயலட்சுமி ஆகியோரை யும், அடுத்த சம்பந்தி கணேசன் – சுமதி ஆகியோரைத் தான் பாராட்டி நன்றி செலுத்துகின்றேன்.
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கிற
முதல் உரிமை யாருக்கு?
ஏனென்றால், நல்ல புரிந்துணர்வோடு பிள்ளைகள் ஒருவருக்கொருவர் விரும்பினார்கள். அப்படி பிள்ளை கள் விரும்பினாலும், எவ்வளவு படித்தவர்களாக இருந் தாலும், நம் நாட்டில் இருக்கின்ற நோய் என்னவென்று உங்களுக்கெல்லாம் தெளிவாகத் தெரியும். அப்படி அந்த நோய்க்கு ஆட்படாமல், அறிவுப்பூர்வமாக, அன்பு எங்கே இருக்கிறதோ, பாசம் எங்கே இருக்கிறதோ, உரிமை எங்கே இருக்கிறதோ, தகுதி எங்கே இருக்கிறதோ அவர்களைத் தேர்ந்தெடுக்கிற முதல் உரிமை யாருக்கு என்றால், வளர்ந்த பிள்ளைகளுக்குத்தான் என்பதை அங்கீகரித்த சிறப்பானவர்கள் – எனவே, அவர்கள் நம்முடைய வாழ்த்துக்கு உரியவர்கள்.
அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் மட்டும் பிறக்கவில்லை என்றால்….
நாங்கள் இதுபோன்ற மணவிழாக்களை நடத்துவது என்பது என்பதெல்லாம் சாதாரணம். ஏனென்றால், நம்முடைய நாட்டில் இன்னமும் ஒரு பக்கத்தில் ஜாதிவெறி; இன்னொரு பக்கம் மதவெறி; இன்னொரு பக்கம் பதவி வெறி; ஆடம்பர வெறி இவை அத்தனையும் இருக்கின்ற ஒரு சமுதாயத்தில், அதை எதிர்த்துப் போராடிய அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் மட்டும் பிறக்கவில்லை என்றால், இவ்வளவு பேர் ஆசிரியர்களாக வந்திருக்க முடியாது.
மல்லிகாவினுடைய ஆற்றல் என்பது
எளிதில் அளவிட முடியாத ஒன்று!
இன்றைக்கு நம்முடைய கோவிந்தராஜ் அவர்கள் மருத்துவர், பேராசிரியர் மல்லிகா அவர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்.
மல்லிகாவினுடைய ஆற்றல் என்பது எளிதில் சுலபமாக சொல்லிவிட, அளவிட முடியாத ஆற்றலாகும்.
நம்முடைய கல்வி நிறுவனங்களை, பல்கலைக் கழகத்தை, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி நிறு வனத்தை, மருந்தியல் கல்லூரியைச் சேர்ந்த முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் எல்லாம் இங்கே வந்திருக்கிறார்கள். இது ஒரு கல்விக் குடும்பம்.
மூன்று வகையான குடும்பத்திற்குப் பொறுப்பேற்கக் கூடியவன் நான்!
எனக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயம் என்னவென்று சொன்னால், மூன்று வகையான குடும்பத்திற்குப் பொறுப்பேற்கக் கூடியவனாக நான் இருக்கிறேன்.
ஒன்று, கொள்கைக் குடும்பம். ஏற்கெனவே இருப்பது குருதிக் குடும்பம்; மூன்றாவது கல்விக் குடும்பம்.
இந்த மூன்று குடும்பங்களிலும் எங்களைப் போல ஒருங்கிணைந்தவர்கள் வேறு யாரும் கிடையாது. அத னால்தான், 200 மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், கவலையில்லாமல் நிறுவனங்களை நடத்திக் கொண் டிருக்கின்றோம்.
ஏறத்தாழ அரை நூற்றாண்டைத் தொடக்கூடிய நிறுவனத்தில், மிகப்பெரிய பகுதியை உருவாக்கிய பெருமை யாருக்கு என்றால், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம் என்பதில், முதலில் தஞ்சையில்தான் கல்வி நிறுவனம் உருவானது; அதுதான் பெரியார் நூற் றாண்டு பாலிடெக்னிக்.
பெண்களுக்காகத்தான் தொடங்கப்பட்டது!
எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் உருவானது. பெண்களுக்காகத்தான் அந்தக் கல்லூரி தொடங்கப்பட்டு, பிறகு அக்கல்லூரி வளர்ச்சியடைந்த நிலையில், என்னோடு பல்கலைக் கழகத்தில் படித்த சுலோச்சனா என்பவர், ஒரு தனி அதிகாரியாக இங்கே பணியாற்றினார். அதற்கடுத்ததாக பொறியாளர் சுந்தரிவெள்ளையன் அவர்கள் இங்கே பணியாற்றினார். அதற்குப் பிறகு, சாதாரண பேராசிரி யராக நம்முடைய மல்லிகா அவர்கள்.
பாளையங்கோட்டை சண்முகம்!
என்னுடைய அருமை நண்பர். அடிக்கடி கொள்கை ரீதியாக சண்டை போட்டுக் கொள்ளக்கூடிய, கருத்திய லில் மிகவும் மாறுபட்டவர்கள் நாங்கள். பாளையங் கோட்டை சண்முகம் அவர்கள், மனித உரிமைகளுக் காகப் போராடக் கூடியவர். மனித உரிமைகளுக்கு எங்கெல்லாம் ஆபத்து இருக்கிறதோ, அங்கெல்லாம் போராடக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் அவர்.
இட ஒதுக்கீடு மற்ற பிரச்சினைகளில் நானும், அவரும் மிகப்பெரிய அளவிற்கு விவாதம் செய்கின்றவர்கள். ஆனால், மிக நெருக்கமான நண்பர்கள். உறவுக்காரர்கள் போன்று பழகுவோம்.
அப்படிப்பட்ட அய்யா சண்முகம் அவர்கள், எல்லா வகையிலும் எங்களுக்கு அறிவுரை வழங்கக்கூடியவர்; தோன்றாத் துணையாவார். அப்பொழுதுதான், அவர் மல்லிகா அவர்களை அறிமுகப்படுத்தினார். மல்லிகா அவர்களின் சித்தப்பாதான் அய்யா சண்முகம் அவர்கள்.
பரிந்துரை என்ற முறையில் இதை நான் சொல்ல வில்லை; மல்லிகா அவர்களை உங்கள் கல்வி நிறுவனத் தில் பயன்படுத்திக் கொள்ள முடியுமா? என்று பாருங்கள் என்றார் அய்யா சண்முகம் அவர்கள்.
எங்களுக்கு ஒரு பெரிய ‘அசெட்’
பேராசிரியர் மல்லிகா!
அன்றையிலிருந்து இத்தனை ஆண்டுகள் வரையில், எங்களுக்கு ஒரு பெரிய ‘அசெட்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்; எங்கள் செல்வமாகவே திகழ்ந்தவர் மல்லிகா அவர்கள்.
எங்களைத் தொந்தரவு செய்யமாட்டார் மல்லிகா அவர்கள். முக்கியமானது எதுவோ, அதை மட்டும் அவர் கேட்பார். எல்லோரிடமும் சுமூகமாகப் பழகக் கூடியவர் அவர்.
அன்பால் கட்டிப் போடக் கூடியவர்!
எப்பொழுதுமே ஒரு பெரிய நிறுவனத்தில் இரண்டு வகையான ஆளுமைகள் உண்டு.
ஒன்று, அதிரடி கொடுத்து பயமுறுத்தி வைத் திருக்கின்ற ஓர் ஆளுமை.
இன்னொன்று, அன்பால் வெல்லக்கூடிய ஆளுமை.
‘‘அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே!” என்றார் வள்ளலார் அவர்கள். அதுபோன்று, அன்பால் கட்டிப் போடக் கூடிய அளவிற்கு இருக்கக்கூடியவர் நம்முடைய மல்லிகா அவர்கள்.
அவர், சொந்த ஊரான திருநெல்வேலியை மறந்துவிட்டு, தஞ்சாவூர்க்காரராகவே மாறிவிட் டார். அந்தக் காலத்தில், பிற மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூருக்கு வந்தவர்களையெல்லாம் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்று சொல்வார்கள். ஆனால், அப்படிப்பட்டவர் அல்ல நம்முடைய மல்லிகா அவர்கள். இந்த மாவட்டத்தில் உள்ளவர்களுடைய பஞ்சத்தைப் போக்குவதற்காக அங்கே இருந்து வந்த மருத்துவரே இவர்கள்.
இரண்டு நல்ல குடும்பம் இன்றைக்கு இணைந்து மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் – நம்முடைய பேரப் பிள்ளைகள் விரும்பியபடியே மணமக்களாக ஆகியிருக்கிறார்கள்.
நன்றி – பாராட்டு!
அதற்காக இரு குடும்பத்தினருக்கும், இந்தக் குடும் பத்தினுடைய பொறுப்பாளன் என்ற முறையில், அவர் களுக்கு நான் நன்றியைத் தெரிவித்து, பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பார்ந்த மணமக்களாக இருக்கக்கூடிய எங்கள் பேரப் பிள்ளைகளே, செல்வங்களே – நான், மண விழாக்களை நடத்தி வைக்கும்பொழுது, மணமக்களுக்கு அறிவுரைகளைச் சொல்வதில்லை.
ஏனென்றால், யாரும் அதைக் கேட்பதற்கும் தயாராக இல்லை; அந்த அறிவுரைகள் அவர்களுக்குத் தேவைப் படுவதும் இல்லை. ஏனென்றால், நம்மைவிட நிறைய விஷயம் தெரிந்தவர்கள் அவர்கள்.
தாத்தாவைவிட, பேரப் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள்!
பொதுவாகப் பார்த்தீர்களேயானால், அப்பாவைவிட, மகன் 10 ஆண்டுகள் முன்னே இருப்பார், இன்றைக்கு இருக்கின்ற அறிவியல் உலகத்தில். ஆனால், பேரப் பிள்ளைகள், 10 ஆண்டுகள் அல்ல; 20 ஆண்டுகள் முன்னே இருப்பார்கள். தாத்தாவோடு, பேரப்பிள்ளைகள் தான் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். எல் லோருடைய வீட்டிலும் இது இயல்பு.
தாத்தாவைவிட, பேரப் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள் என்பதற்காக ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசிய மில்லை. கடந்த 30 ஆண்டுகளில் – மூன்று தலைமுறை களில் பேரப் பிள்ளைகள்தான் முன்னால் இருப்பவர்கள் என்று மனோதத்துவவாதிகள் சொல்கிறார்கள்.
நம்மைப் போன்ற வயதானவர்கள் வீட்டில் தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்போம். அந்தத் தொலைக்காட்சியின் ரிமோட்டில் நிறைய பட்டன்கள் இருந்தாலும், இரண்டு பட்டன்களின் பயன்பாடுபற்றித் தான் நாம் தெரிந்து வைத்திருப்போம். அலைவரிசையில் ஏதாவது மாறிப் போனால், மீண்டும் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அலைவரிசையைப் பார்ப்பதற்குத் தடுமாறுவோம்; ஆனால், வீட்டில் உள்ள பேரப் பிள்ளை, கொள்ளுப் பேரப் பிள்ளைகள் வேகமாக வந்து, ‘‘தாத்தா, உங்களுக்கு என்ன சேனல் பார்க்கவேண்டும்?” என்று சொல்லி உடனே ரிமோட்டை எடுத்து மாற்றுவார்கள். அப்படியென்றால், யார் அறிவாளி? ‘‘குமரகுருபரர்கள்” என்பதுதான் முக்கியம்.
ஆகவேதான், இன்றைய பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லவேண்டிய அவசியம் இல்லை. வேண்டு கோளாகத்தான் வைப்போம்.
உங்கள் பெற்றோரிடம் அன்பு, பாசம் காட்ட மறக்காதீர்கள்; நன்றி காட்டுங்கள்!
அன்புச் செல்வங்களே, நீங்கள் வாழ்வில் எவ்வளவு தான் உயர்ந்தாலும் – உயரவேண்டும் – உயர்வீர்கள் – உழைப்பு உங்களை உயர்த்தும். அறிவு உங்களை நேர்த்தியாகச் செய்யும் – அனுபவம் உங்களைச் செதுக்கும். ஆகவே, நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்தாலும், உங்கள் பெற்றோரிடம் அன்பு காட்ட, பாசம் காட்ட மறக்காதீர்கள்; நன்றி காட்டுங்கள்; அவர்களுடைய தியாகத்தால், அவர்களுடைய உழைப் பால், அவர்களுடைய திட்டத்தால் நீங்கள் இன்றைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கிறீர்கள்.
பிள்ளைகளிடம் இருந்து பெற்றோர், பணத்தை எதிர்பார்ப்பதில்லை; பாசத்தையும், அன்பையும்தான், பண்பையும் கடைசிவரையில் எதிர்பார்ப்பார்கள்.
நம்முடைய குடும்பத்துப் பிள்ளைகளுக்காக இதைச் சொல்லவில்லை; பொதுவாக நான் சொல்கிறேன்.
வரவுக்குட்பட்டு செலவழிக்கவேண்டும்:
தந்தை பெரியார்!
அடுத்ததாக, ஒருவருக்கொருவர் நீங்கள் விட்டுக் கொடுத்து வாழவேண்டும் என்றார். தந்தை பெரியாரின் தலைமகன் அறிஞர் அண்ணா அவர்கள். பெரியார் அவர்கள் அறிவுரை சொல்லும்பொழுது, ‘‘சிக்கனமாக வாழவேண்டும்; வரவுக்குட்பட்டு செலவழிக்கவேண்டும்” என்பார். சிக்கனமாக வாழ்கின்றவர்கள் சுயமரியாதைக் காரர்களைவிட, உலகத்தில் வேறுயாரும் கிடையாது. அப்படி சிக்கனமாக வாழ்ந்தால், கடன் வாங்கவேண்டிய அவசியமேயில்லை. கடன் வாங்காதவர்கள், யாருக்கும் தலைவணங்கவேண்டிய அவசியம் இல்லை.
பெரியார் போன்ற ஒரு மானிட நேயரை
உலகத்தில் தேடினாலும் காண முடியாது!
பெரியார் என்றவுடன், நிறைய பேர் மேலெழுந்த வாரியாக என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், ‘அவர் கடவுள் இல்லை என்று சொன்னவர்; அவர் பார்ப்பானைத் திட்டியவர்” என்று இரண்டே வரிகளில் முடித்துக் கொள்வார்கள்.
ஆனால், அவர்களுடைய நினைப்புத் தவறு; பெரியார் போன்ற ஒரு மானிட நேயர் உலகத்தில் தேடிக் கண்டுபிடித்தாலும், காண முடியாது. அவர் ஒருமானிட நேயர்; மக்களை நேசித்தவர். அவருக்கு ஜாதியின்மேல் இருந்த கோபம், மதத்தின்மேல் இருந்த கோபம், கடவுள்மேல் இருந்த கோபம், சடங்குகளின்மேல் இருந்த கோபம் ஏனென்றால், இவை அத்தனையும் நம் மக்களை சமத்துவமாக நினைக்கவில்லையே? சரி பகுதியாக இருக்கின்ற பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார்களே, பெண்கள் படிக்கக் கூடாது; எதற்கும் முன்வரக்கூடாது என்று சொல்கிறார்களே என்கிற கோபம்தான்.
‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’
‘‘பெண் ஏன் அடிமையானாள்?” என்று நூறு ஆண்டு களுக்கு முன்பு தந்தை பெரியார் கேட்டார். இன்றைக்கு எல்லா பெண்களும் படித்திருக்கிறார்கள்.
அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு உருவான, ஒரு பாலிடெக்னிக்கில் ஆயிரக்கணக்கான பெண்கள் படித்து, உலகம் முழுவதும் இருக்கிறார்கள். நாங்கள் எந்த நாட்டிற்குப் போனாலும், அங்கெல்லாம் எங்கள் மாணவிகள், எங்களை வரவேற்பார்கள்.
அப்படிப்பட்ட அளவிற்கு இன்றைக்கு அறிவு வளர்ந் திருக்கிறது; கல்வி வளர்ந்திருக்கிறது; வாழ்க்கைத் தரம் வளர்ந்திருக்கிறது; அறிவியல் உயர்ந்திருக்கிறது. ஆனால், பண்பும் வளரவேண்டும்.
‘‘ஈகோ’’ என்று சொல்லக் கூடிய தன்முனைப்புக்கு இடமில்லாமல் வாழுங்கள்!
அந்த அடிப்படையில் வரும்பொழுதுதான் அண்ணா அவர்கள் சொன்னார்,
‘‘விட்டுக் கொடுப்பவர்கள், கெட்டுப் போவதில்லை;
கெட்டுப் போகிறவர்கள், விட்டுக் கொடுப்பதில்லை”
என்று இரண்டே வரிகளில் சிறந்த வழிமுறை கூறினார்.
ஆகவே, ‘‘ஈகோ” என்று சொல்லக் கூடிய தன் முனைப்புக்கு இடமில்லாமல் நீங்கள் வாழவேண்டும்.
அந்தக் காலத்தில் என்ன சொன்னார்கள்? இல் லறத்தைவிட்டால், துறவறம் என்றார்கள். அதனால்தான், திருமணச் சடங்கில், காசிக்கு மாப்பிள்ளை போவது போன்று வைத்திருப்பார்கள்.
சமூகத்திற்கு நாம் செய்யவேண்டிய கடமைகள் உண்டு!
இப்படி இருந்த ஒரு சூழலில், இல்லறத்தில் இருந்து கொண்டே செய்வதற்குப் பெயர் தொண்டறம். ‘‘உனக் காக மட்டும் வாழாதே, நீ சமூகத்தில் ஓர் அங்கம்; எனவே, மற்றவர்களுக்காகவும் வாழுங்கள்” என்பதுதான் தொண்டறம்.
‘‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை,
தனக்காகவும் பிறக்கவில்லை” என்று பெரியார் சொன்னார்.
முதலில் தன்னிறைவு; அதேநேரத்தில், சமூகத்திற்கு நாம் என்ன செய்தோம்? நம்மால் என்ன பயன்? என்று நினைக்கவேண்டும்.
ஏனென்றால், சமூகத்தால்தான் நாம் பாதுகாக்கப் படுகின்றோம். ஆகவே, சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு.
எனவே, அன்பார்ந்த மணமக்களாகிய செல்வங்களே, நீங்கள் அறிவோடு, மூடநம்பிக்கையற்ற தன்னம்பிக்கை யோடு வாழுங்கள்.
விளையாட்டுப் போட்டி, தேர்தல் போட்டியில் யார் முதலிடம் வருகிறார்களோ அவர்களுக்குத்தான் பரிசு கொடுப்பார்கள். ஆனால், வாழ்க்கை என்பது அதற்கு நேர் எதிரானது என்பதை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
சுயமரியாதை வாழ்வு, சுகவாழ்வு!
வாழ்க்கையில் யார் வெற்றி பெற்றோம் என்று நீங்கள் போட்டி போடுவதைவிட, யார், யாருக்காகத் தோற்றோம் என்பதில் போட்டிப் போடுங்கள்; தோற்றவர்களுக்குத் தான் முதல் பரிசு. வெற்றி பெற்றவர்களுக்கு அல்ல. அதுதான் உங்களுடைய வாழ்க்கைக்கு இனிமையாக இருக்கும் என்று சொல்லி, எல்லோரையும் வரவேற் கிறேன்.
சுயமரியாதை இயக்கத்திற்கு நூற்றாண்டு விழா!
சுயமரியாதை வாழ்க்கை, சிறப்பான வாழ்க்கையாகும்!
நூறாண்டை நெருங்கும் முன்பு, பெரியார் தொடங்கிய இந்த சுயமரியாதைத் திருமண முறை செல்லுபடியற்றது என்று சொன்னார்கள்; இன்றைக்கு, நான்கு சாட்சிகள் இருந்தால் போதும், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரு டைய முயற்சியினால், உலகமே இன்றைக்கு சுயமரி யாதைத் திருமணத்தைப் பின்பற்றுகிறது. எல்லா நாடுகளிலும் இதுபோன்ற மணவிழாக்களை நான் நடத்தி வைத்திருக்கின்றேன்.
உலகளாவிய முறைதான்
சுயமரியாதை மண முறை!
மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜெர்மன் போன்ற பல நாடுகளிலும் இதுபோன்ற மணவிழாக்கள் நடைபெற்று இருக்கிறது.
ஆகவே, உலகளாவிய முறைதான் இந்த மணவிழா; எனவே, யாரும் பயப்படவேண்டிய அவசியமில்லை. மகிழ்ச்சியாக வாழுங்கள், அன்போடு வாழுங்கள்!
உங்களுக்காக மட்டுமல்லாமல், பிறருக்காகவும் வாழுங்கள்!
நன்றி, வணக்கம்!
வாழ்க மணமக்கள்! வாழ்க பெரியார்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்து¬ ரயாற்றினார்.