தேர்தலில் ஒன்றிய அரசுப் பணியாளர்களை ஈடுபடுத்த திட்டமா? : மம்தா குற்றச்சாட்டு

viduthalai
1 Min Read

கொல்கத்தா, ஏப்.26- மேற்கு வங்காளத்தில் 25 ஆயிரம் ஆசிரி யர்கள் வேலை நீக்கம் செய்யப் பட்டதால், தேர்தல் பணியில் தந்திரமாக ஒன்றிய அரசு ஊழி யர்களை ஈடுபடுத்த பா.ஜனதா முயற்சிக்கிறது என்று முதலமைச்சர் மம்தா குற்றம் சாட்டினார்.

25 ஆசிரியர்கள் நியமனம் ரத்து

மேற்குவங்காள மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாநில அரசு தேர்வுமுலம் தேர்வு செய்யப்பட்டு, 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணிய மர்த்தப்பட்டனர். இதில் முறைகேடு நடந்து இருப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம். 25 ஆயிரம் ஆசிரியர் பணி நியமனங்களை ரத்துசெய்து உத்தரவிட்டது.
இவர்களில் பலர் தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் பணியில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

25 ஆயிரம் ஆசிரியர்கள் நியம னத்தை ரத்து செய்ததற்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா கடும் எதிர்ப்பை தெரிவித்தார். இந்தநிலையில் மேதினிபூர் நாடா ளுமன்ற தொகுதியில் நடந்ததேர்தல் பிரச்சார கூட்டத்தில், முதலமைச்சர் மம்தா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

யாராவது தவறு செய்திருந்தால், அதைத் திருத்த முடியும், ஆனால் 25,000 பணியிடங்களைப் பறிப்பது மிகப்பெரிய அநீதி, பல ஆசிரியர்கள் வேலை இல்லாமல் இருந்தால், பள்ளிகள் எவ்வாறு செயல்படும்?. நாட்டில் வேலையில்லா திண்டாட் டம் அதிகமாக உள்ள நிலையில், பா.ஜனதா வேலைகளை பறிக்கிறது.

வேலை இழந்தவர்களை, தேர் தல் பணியில் ஈடுபடுத்த முடியாது. அதற்கு பதில் ஒன்றிய அரசு ஊழியர்கள் ஈடுபடுத்த முயற்சி நடக்கிறது. அவர்கள் காவி முகா மின் உத்தரவின்பேரில் பணியாற் றுவார்கள். எனவே, இதில் பா.ஜனதாவின் தந்திரம் உள்ளது. நாங்கள் வேலை தருகிறோம். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைகள் தயாராக உள்ளன. ஆனால் பா.ஜனதா, தனது அரசியல் நோக்கத் திற்காக வேலைகளை பறிக்கிறது. நிர்வாகமும், ஆசிரியர்களும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நாங்கள் அவர்களுக்கு துணை நிற்போம்.
-இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *