24.4.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦பிரதமர் மோடியின் மத வெறுப்பு பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்கிறதாம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ ராஜஸ்தானில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியின் மத வெறுப்பு பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரியும், சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிக்கை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ தேர்தல் முடிவுகளின் போக்குகள், பதவியில் இருந்து செல்லப்போகும் பாஜக தலைவர்கள் (மோடி, யோகி) பேச்சில் தெரிகிறது என அகிலேஷ் சாடல்
♦ பதஞ்சலி நிறுவன விளம்பர விவகாரம் – உங்க மன்னிப்பை பூதக்கண்ணாடி வைத்து தான் தேடணுமா? பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம். இதில் தவறு எங்கே நடந்துள்ளது என்பது குறித்து ஒன்றிய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
தி இந்து:
♦ ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் மத வெறுப்பு பேச்சுக்கு அவரைத் தகுதி நீக்கம் செய்யவும், அவரது தேர்தல் பிரச்சாரத்தை தடை செய்யவும் இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவில் சமூக அமைப்புகள் தலைமை நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்தனர்.
தி டெலிகிராப்:
♦ஜார்க்கண்டில் மக்களவைத் தேர்தலில் இந்தியா அணி வெற்றி பெறும்: ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் நம்பிக்கை
டைம்ஸ் ஆப் இந்தியா:
♦ டில்லியில் நடைபெறும் சமூக நீதி கருத்தரங்கில் ராகுல் காந்தி இன்று (24.4.2024) உரையாற்றுகிறார்.
– குடந்தை கருணா