மோடி நாட்டின் பிரதமராக இல்லை பா.ஜனதாவின் பிரதமராக தன்னை முன்னிறுத்துகிறார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

viduthalai
1 Min Read

மும்பை, ஏப். 21- மராட்டியத் தில் இந்தியா கூட்டணி சார்பில் அவுரங்காபாத் நாடாளுமன்ற தொகுதி யில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா வேட்பாளர் சந்திரகாந்த் கைரே மற்றும் ஜல்னா வில் காங்கிரஸ் வேட்பா ளர் கல்யாண் காலே ஆகியோரை ஆதரித்து தேசியவாத காங்கிரஸ்- சரத்சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், “நான் இங்கு வரு வதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்தேன். பிரதமர் முழு நாட்டிற்கும் சொந் தமானவர். ஆனால் அவ ரது பேச்சை கேட்டால், அவர் நாட்டிற்கான பிர தமர் அல்ல. பா.ஜனதா வின் பிரதமர் என்று தோன்றுகிறது.

பிரதமர் நாட்டிற்காக என்ன செய்ய போகி றோம் என்பதை மக்களி டம் தெரிவிக்கவேண்டும். அவர் அதை விட்டுவிட்டு சில நேரங்களில் மேனாள் பிரதமர் ஜவகர்லால் நேருவை விமர்சிக்கிறார். சில நேரங்களில் ராகுல் காந்தியையும் மற்றும் என்னையும் விமர்சிக்கி றார். நேரு தனது வாழ் நாளில் 10 ஆண்டுகளை ஆங்கிலேயர்களுக்கு எதிராக சிறையில் கழித் தார். அவர் அறிவியலை ஊக்குவித்தார்.

பன்னாட்டு தொழி லாளர்கள் அமைப்பின் சமீபத்திய ஆய்வறிக்கை, இந்தியாவில் கல்லூரியிலிருந்து வெளிவரும் 100 மாணவர்களில் 87 பேர் வேலையில்லாமல் உள்ளனர் என்று கூறு கிறது. மராட்டியத்தின் பிற பகுதிகளை போலவே மரத்வாடாவிலும் கடு மையான வறட்சி நிலவு கிறது. ஆனால் இந்த நிலைமையை சீர்செய்ய ஒன்றிய, மாநில அரசுக ளுக்கு நேரமில்லை” என்று அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *