‘இந்தியா’ கூட்டணியின் தலைமையில் ஒன்றியத்தில் புதிய ஆட்சி ஏற்படுவது உறுதி!

Viduthalai
1 Min Read

சி.பி.அய். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேட்டி!

திருவாரூர், ஏப். 20– திருத்துறைப்பூண்டி ஒன் றியம் வேளூர் ஊராட்சி அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி யில் வாக்களித்தபின் சி.பி.அய். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறிய தாவது: “பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி இருக் கிறது. அனைத்துத் தரப்புமக்களும் குடும்பத் தோடுஆர்வமாக வந்து வாக்களித்து இருக்கி றார்கள். நாகப்பட்டினம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் மிகப் பெரிய எழுச்சியை மக்களிடத்தில் காண முடிகிறது.

அந்த எழுச்சி என்பது மாற்றத்திற்கான எழுச்சியாகும். பத்தாண்டுகாலம் மக்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள், அநீதிகள், அடக்கு முறைகள் அனைத்திற்கும் எதிராக மக்கள் வாக்களித்துஇந்திய ஒன்றியத்தில் ஒரு மாற்று ஆட்சியை, புதிய ஆட்சியை இந்தியா கூட்டணியின் தலைமையில் எதிர்பார்த்து அதிகாலை தொடங்கியே வந்து தன்னெழுச்சி யாக வாக்களித்து இருக்கும் அற்புதமான காட்சியை காண முடிந்தது. நிச்சயமாக உறுதியாக ‘இந்தியா’ கூட்டணி யின் சார்பில் ஆட்சி அமையும் என்பது உறுதி ஆகி இருக்கிறது. -இவ்வாறு சி.பி.அய். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேட்டியளித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *