பா.ஜ.க.வினரை ஊருக்குள் நுழையவிடாத வடஇந்திய விவசாயக் கிராமங்கள்

2 Min Read

அரியானா

பாஜக மற்றும் ஜேஜேபி தலைவர்களே, இந்த நகரம் மற்றும் கிராமத்தின் பக்கம் வரவேண்டாம். ரிலையன்ஸ் பொருட்கள், ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையம், ரிலையன்ஸ் நிறுவனத் தயாரிப்புகள் எதையுமே இங்குள்ள கடைகளில் விற்கமாட்டோம். வெளியிலிருந்தும் வாங்கமாட்டோம். ஜியோ சிம்களை நாங்கள் உடைத்து வீசிவிட்டோம் – பாரதிய கிசான் யூனியன் சார்பில் அரியானா முழுவதும் வைக்கப்பட்டுள்ள பதாகை.

அரியானா

ஞாயிறு மலர்

ஊர்மக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது என்னவென்றால், பாஜக மற்றும் ஜேஜேபி கட்சி யினர் இங்கு வாக்குகள் கேட்டு வரவேண்டாம். எச்சரிக்கையையும் மீறி வந்தால் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம். களிபலா கிராமம் (குர்ஷேத்ரா மாவட்டம்)

உத்தரப்பிரதேசம்

ஞாயிறு மலர்

பாஜகவினர் இந்த கிராமத்திற்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி எச்சரிக்கையை கவனிக்காமல் வந்தால் அவர்களின் உயிருக்கு நாங்கள் கியாரண்டி கொடுக்கமாட்டோம். ஹபிபூர் கிராமம் ஹசன் பூர் அம்ரோஹா மாவட்டம் உத்தரப்பிரதேசம்.

உத்தரப்பிரதேசம்

ஞாயிறு மலர்

பா.ஜ.க.வினருக்கு இந்த கிராமத்திற்குள் வருவதற்கு தடை விதித்துள்ளோம். அப்படியே வந்தாலும் அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது. இப்படிக்கு ஜாதர்பூர் அம்ரேலி மாவட்டம் உ.பி. – விவசாயிகளை துன்புறுத்திய பாஜக சைத்தான்களுக்கு தண்டனை ஏன் வழங்கக் கூடாது.

சொன்னதை செய்து காட்டிவிட்டார்கள்

ஞாயிறு மலர்

அரியானா மாநிலம் சிர்ஸாவில் பாஜக சார்பாக பரப்புரைக்கு வந்த ஒன்றிய இணை அமைச்சர் அசோக் தன்வரை கற்கள் கொண்டும், தடிகள் கொண்டும் அடித்து விரட்டினர். தப்பி ஓடும் போது கார்மீது கற்கள் பட்டு அவரது உடலில் சிறு காயம் ஏற்பட்டது.

பீகார்

ஞாயிறு மலர்
பா.ஜ.க.வினர் இந்தக் கிராமத்தில் நுழைய தடைவிதிக்கிறோம். உக்னா கிராமம் ஜக்தீஷ்பூர் மாவட்டம் பீகார்.

அரியானா – எச்சரிக்கை

ஞாயிறு மலர்

விவசாயிகளைத் துன்புறுத்தினீர்கள் – அதன் பலனை அனுபவியுங்கள். பாஜக அதன் கூட்டணி ஜேஜேபி கிராமத்திற்குள் வருவதற்கு தடை விதிக்கிறோம். இந்த எச்சரிக்கையையும் மீறி ஊருக்குள் நுழைந்தால் எவ்வகையான தாக்குதல் நடந்தாலும் நாங்கள் (ஊர்மக்கள்) பொறுப்பாகமாட்டோம். அனைத்து கிராம மக்களின் ஒப்புதலோடு, ஜைத்பூரா கிராமம், அம்பாலா மாவட்டம்

உத்தரப்பிரதேசம்

ஞாயிறு மலர்
பா.ஜ.க.வினர் ஊருக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வாக்கு கேட்க இங்கு வந்தால் உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கமாட்டோம். சேதங்களுக்கும் பாஜகவினர் உயிருக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள்
ஜுஹான் பூர், கிராமம், விஹுவல் வட்டம், அம்பேத்கர் நகர் மாவட்டம், உத்தரப்பிரதேசம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *