செய்திச் சுருக்கம்

1 Min Read

அதிகரிப்பால்…

ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை அதிகரிப்பதால் தான் அதற்கான தடை சட்டம் மாநிலத்தில் கொண்டு வரப் பட்டது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன.

சீரமைப்புப் பணிகள்

சென்னை முகலிவாக்கம், மதனந்தபுரம், ராமாபுரம், மடிப் பாக்கம் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை அக்டோபர் 5ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அதி காரிகளுக்கு உத்தரவு.

விரிவான விசாரணை

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி டெண் டர் முறைகேடு வழக்கு ஒரு வாரத்தில் பட்டியலிட்டு விரிவாக விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திறனறித் தேர்வு

தமிழ்நாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவியருக்கான திறனறித் தேர்வு இன்று தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *