காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சாடல்

2 Min Read

பா.ஜ.க.வில் இணைந்த 23 பேரின் ஊழல் வழக்கு முடித்து வைப்பு
விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதா?
காங்கிரசு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சாடல்

புதுடில்லி,ஏப்.4- விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள் ளார்.
எதிர்க்கட்சித் தலை வர்கள் மீதான விசாரணை அமைப்புகளின் வழக்குகள் குறித்த புலனாய்வு அறிக் கையை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட் டுள்ளது. அதில்; 10 ஆண்டு கால மோடி ஆட்சியில், ஊழல் வழக்கு களுக்கு ஆளான எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேர் பாஜகவில் சேர்ந்துள்ளனர். பாஜகவில் சேர்ந்த 25 பேரில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்துவைக்கப் பட்டன. 20 பேருக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஏதுமின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டு மட்டும் ஊழல் குற்றச் சாட்டுக்கு ஆளான 6 அரசியல்வாதிகள் பாஜகவில் சேர்ந்துள்ளனர். ஊழல் வழக்குகளுக்கு பயந்து அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 10 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். தேசியவாத காங்., சிவசேனாவில் இருந்து தலா 4 பேரும், திரிணாமுல் காங்கிரசில் இருந்து 3 பேரும் கட்சி மாறியுள்ளனர். தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து 2 பேரும், சமாஜ்வாதி, ஜெகன்மோகன் கட்சியில் இருந்து தலா ஒருவரும் விலகி பாஜகவில் சேர்ந்துள்ளனர். பாஜகவுடன் சேர்ந்ததால் ஆதாயமடைந்த 25 பேரில் அஜித் பவார், பிரபுல் பட் டேல் உள்ளிட்ட 12 பேர் மராட்டியத்தைச் சேர்ந்த வர்கள் ஆவர் என குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மால்லிகார்ஜுன கார்கே; விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்து கிறது. ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்த வர்கள் பாஜகவில் இணைந்தால் மோடி வாஷிங் மிஷின் மூலம் சுத்தப்படுத்தப்படு கிறார்கள். சிபிஅய், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாக பாஜக பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. நரேந்திர மோடி – அமித் ஷா கூட்டணியின் செயல், ஜனநாயகத்துக்கு சாபமாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *