ஜே.என்.யு. மாணவர் தேர்தலில், பார்ப்பனரல்லாதார் அணி வெற்றி

viduthalai
1 Min Read

அண்மையில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், துணைச் செயலாளர் ஆகிய இடங்களில் இடது கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், பொதுச் செயலாளராகத் தனியாகப் போட்டியிட்ட அம்பேத்கரிய மாணவர் அமைப்பான பிர்சா அம்பேதகர் புலே மாணவர் சங்க (பாப்சா-ஙிகிறிஷிகி) வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
ஜே.என். யு. வரலாற்றில் முதல் முறையாக ஒரு அம்பேத்கரிய மாணவர் அமைப்பு முக்கிய நான்கு பொறுப்புகளில் ஒன்றான பொதுச் செயலாளராக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற முதன்மை நிர்வாகிகளில் இருவர் தாழ்த் தப்பட்ட சமூகத்தவர், ஒருவர் ஓபிசி, ஒருவர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என நான்கு பொறுப்புகளிலும் பார்ப்பனரல்லாதார் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் வாழ்த்துகள்.

– கோ.கருணாநிதி
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *