குஹகாத்தி, மார்ச் 28- ஊழலற்ற ஆட் சியை வழங்குவோம் என்று மேடைக்கு மேடை பிரதமர் நரேந்திர மோடி முழங்கி வரும் நிலை யில் அசாம் மாநில பாஜக கூட்டணி கட்சி நிர்வாகி 500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் கட்டிலில் புரளும் ஒளிப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைர லாகி வருகிறது.
தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் போரோ தலைமையிலான யுபிபிஎல் கட்சி நிர்வாகி பெஞ்சமின் பாசுமா தாரியின் இந்த ஒளிப் படம் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.
உட்ல்குரி மாவட் டத்தில் உள்ள பைரகுரி பகுதியைச் சேர்ந்த யுபிபிஎல் கட்சி நிர்வாகி பெஞ்சமின் பாசுமாதாரி ரூ.500 கரன்சி நோட்டு களை அடுக்கி வைத்து தூங்கிக் கொண்டிருக்கும் இந்தப் ஒளிப்படம்
ஊழலற்ற ஆட்சியை வழங் குவோம் என்று முழங்கி வரும் மோடிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.