நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இந்தியா கூட்டனி சார்பில் போட்டியிடும் ஜெ.பி.டி.கோபிநாத் (காங்கிரஸ்) அறிமுக கூட்டம் 26.3.2024 அன்று ஒசூர் அசோக் கிராண்ட் திருமண மண்டபத்தில் திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் அர.சக்கரபாணி வேட்பாளரை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். தொடர்ந்து இந்தியா கூட்டனி கட்சிகளின் பிரதிநிதிகள் வாழ்த்துரை வழங்கி உரையாற்றினார்கள். திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் அசெ.செல்வம், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, ப.க.மாவட்ட செயலாளர் செ.பேரரசன், இளைஞரணி ஹரிஸ், பூபதி, சங்கரன், ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
ஒசூரில் “இந்தியா” கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books