ஒசூரில் “இந்தியா” கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

viduthalai
1 Min Read

நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இந்தியா கூட்டனி சார்பில் போட்டியிடும் ஜெ.பி.டி.கோபிநாத் (காங்கிரஸ்) அறிமுக கூட்டம் 26.3.2024 அன்று ஒசூர் அசோக் கிராண்ட் திருமண மண்டபத்தில் திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் அர.சக்கரபாணி வேட்பாளரை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். தொடர்ந்து இந்தியா கூட்டனி கட்சிகளின் பிரதிநிதிகள் வாழ்த்துரை வழங்கி உரையாற்றினார்கள். திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் அசெ.செல்வம், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, ப.க.மாவட்ட செயலாளர் செ.பேரரசன், இளைஞரணி ஹரிஸ், பூபதி, சங்கரன், ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *