கனிமவள கொள்ளை வழக்கில் சிறை சென்ற ஜனார்த்தன ரெட்டி பி.ஜே.பி.யில் இணைந்தார்

viduthalai
1 Min Read

பெங்களூரு,மார்ச் 27- கருநாடகா மேனாள் அமைச்சரும், கனிமவள கொள்ளை வழக்கில் சிறை சென்ற ஜனார்த்தன ரெட்டி மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்துள் ளார். கல்யாண ராஜ்ய பிரகதி பக்-ஷா கட்சித் தலைவரும் கங்கவாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஜனார்த் தன ரெட்டி பாஜகவில் இணைந்தார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி உள்ள சூழலில், மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, மூத்த தலைவரும் மேனாள் முத லமைச்சருமான எடியூ ரப்பா ஆகியோர் முன் னிலையில் ஜனார்த்தன ரெட்டி பாஜகவில் இணைந்துள்ளார். மேலும், தனது கட்சி யையும் அவர் பாஜகவில் இணைத்துள்ளார்.
ஜனார்த்தன ரெட்டி யின் மனைவி அருணா லக்ஷ்மி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சிலரும் பாஜகவில் இணைந் துள்ளனர்.
சமீபத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த ஜெனார்த்தன ரெட்டி, பாஜகவில் தான் இணைய விரும்புவது குறித்து தெரிவித்ததாக தகவல் வெளி யானது. இந்நிலையில், 25.3.2024 அன்று அவர் முறைப்படி கட்சியில் மீண்டும் இணைந்துள் ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *