சென்னை, மார்ச் 27– சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாளுக்கு பிரமோற்சவம் நடத்தக்கோரிய வழக்கிற்கு ஏப்ரல் 25ஆம் தேதிக் குள் பதில் அளிக்க வேண்டும் என்று பொது தீட்சதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டு உள்ளது.
கோவிந்தராஜப் பெருமாள்
சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெமினி ராதா என்ற எம்.என். ராதாகிருஷ் ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக் கல் செய்தார். அதில், “சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி உள்ளது.
இந்த கோவிலில் சைவ மற்றும் வைணவ பிரிவினருக்கிடையே சுமுகமான சூழல் இல்லாததால் கோவிந்தராஜப் பெருமாளுக்கு கடந்த 50 ஆண்டுகளாக பிரம் மோற்சவம் நடைபெறவில்லை. எனவே, இந்த கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவத்தை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
அவகாசம் வேண்டும்
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கிற்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணை யர், மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் கோவில் பொதுதீட்சிதர்கள் குழு ஆகியோர் பதில் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி டி.பரதசக்கர வர்த்தி ஆகியோர் முன்பு 25.3.2024 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது தீட் சிதர்கள் குழு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட் கப்பட்டது.
அறநிலையத்துறை அனுமதி
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சி.கனகராஜ், “கோவிந்த ராஜப்பெருமாளுக்கு பிரமோற்சவம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கிவிட்டது.
ஆனால், இதற்கு பொது தீட் சிதர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின் றனர். அதுமட்டுமல்ல இந்த வழக்கிற்கும் பதில் மனுதாக்கல் செய்யாமல், கால அவகாசம் கேட்கின்றனர்” என்று வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், “பிரமோற் சவம். நடத்த எந்த தேதியில் அற நிலையத்துறை அனுமதி வழங்கி யுள்ளது?” என்று கேள்வி கேட்ட னர்-.
அதற்கு மனுதாரரின் வழக் குரைஞர், “மே 21ஆம் தேதி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்று பதில் அளித்தார்.
கெடு விதிப்பு
பொது தீட்சிதர்கள் தரப்பில், வழக்கு நிலுவையில் இருக்கும் போது, பிரமோற்சவம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று வாதிடப்பட்டது.
இதை ஏற்க, மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கிற்கு வருகிற ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் பொது தீட் சிதர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று கெடுவிதித்தனர். பின்னர், விசாரணையை தள்ளி வைத்தனர்.