இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி மோடி அரசு மீது காங்கிரஸ் புகார்

viduthalai
1 Min Read

புதுடில்லி, மார்ச் 25- வெளிநாட்டு செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வெள்ளியன்று (22ஆம் தேதி) 48 காசுகள் சரிந்து ரூ.83.61 ஆக வீழ்ச்சி அடைந்தது.
கடந்த ஆண்டு டிசம் பர் 23ஆம் தேதி ரூபாய் மதிப்பு அதன் மிகக் குறைந்த அளவாக ரூ.83.40 ஆக இருந்தது. வரலாறு காணாத இந்த வீழ்ச்சி குறித்து காங்கி ரஸ், பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் ஊடகப் பிரிவு செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பதிவில், “வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களை எவ்வளவு விலைக்கு வாங்குகிறோம் என்பதை ரூபாயின் மதிப்பு தீர்மானிக்கிறது. 2014இல் மோடி ஆட் சிக்கு வரும்போது வெளி நாட்டில் இருந்து 1 டால ருக்கு சரக்கு வந்தால் நாம் ரூ.50 கொடுக்க வேண்டும்.

அதே மதிப்புள்ள 1 டாலருக்கு நாம் இப் போது ரூ.84 தருகிறோம். இந்தியா ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் இப் போது கூடுதலாக ரூ.25 செலுத்துகிறோம். எரி பொருள் விலை அதிக மாகும் போது வாங்கும் சரக்குப் போக்குவரத்தின் செலவு அதிகரிக்கிறது. அதனால் உணவு உள்பட அனைத்து பொருள்க ளின் விலையும் உயர்கி றது. பணவீக்கம் அதிகரிக் கும்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகி தத்தை உயர்த்தும்.
அதன் காரணமாக நாம் வாங்கும் பொருளின் இஎம்அய் அதிகமாகும். ரூபாய் மதிப்பு சரிவு கார ணமாக வீட்டுக் கடன், வாகன கடன், கல்வி கடன் போன்ற கடன்க ளுக்கு வங்கிக்கு அதிக வட்டி செலுத்துகிறோம். 2014க்கு முன்பு ரூபாய் மதிப்பு சரிவையும், டாக் டர் மன்மோகன் சிங் வயதையும் ஒப்பிட்டு அநா கரீக கருத்துகள் சொன்ன அப்போதைய குஜராத் முதலமைச்சர் மோடியை காணவில்லை. அவர் எங்கே போய் விட்டார்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *