தேசத்தை தனிமைப்படுத்திய மோடி: பினராயி விஜயன் குற்றச்சாட்டு
கோழிக்கோடு, மார்ச் 25- குடியுரி மைக்கு மதம் அடிப் படையாக இருக்கக் கூடாது என்ற முழக் கத்தை முன் வைத்து கேரள மாநி லம் கோழிக்கோட்டில் 22.3.2024 அன்று பேரணி – பொதுக் கூட்டம் நடை பெற்றது.
இந்த பேரணி மற்றும் பொதுக் கூட்ட நிகழ்வை துவக்கி வைத்து கேரள முதல மைச்சர் பினராயி விஜ யன் பேசுகையில்,”நாட்டின் இயல் பான மதச்சார்பற்ற தன்மையை சீர்குலைக்கும் முயற்சிகள் சங்பரி வாரிடமிருந்து மேற் கொள்ளப்பட் டுள்ளன. நாட் டின் ஆட்சி அதிகா ரத்தை கையாளும் வாய்ப்பு ஆர்.எஸ். எஸ். தலைமை தாங்கும் கட் சியான பாஜகவுக்கு கிடைத்த தும் சங்பரிவாரின் முயற்சிகள் செயல் படுத்தப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது குடியு ரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் ஒன்றிய அரசு செயல்படுத்துகிறது. இது ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலின் பகுதியாகும். முந்தைய பாஜக அரசுகளும் இதற்கு தேவையானவற்றை செய்துள் ளன. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்ப டையில் 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்போ பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து நமது நாட்டுக்குள் குடியேறிய சிறு பான்மையினருக்கு குடியு ரிமை வழங்கப்படும் என தெரி விக்கப்பட் டுள்ளது.
முஸ்லிம்களுக்கு குடியுரிமை இல்லை
ஆனால் இது அனைத்து சிறுபான்மையினருக்கும் அல்ல என் றும், இந்துக்கள், ஜைன, சீக்கிய, புத்த, கிறிஸ்தவர், பார்சிகள் என 6 வகையான சிறுபான்மையினருக்கு மட்டும் குடியுரிமை வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டுள் ளது. இதற்கான குடியுரிமை சட்டத் திருத்தத்தை 2019இல் மோடி அரசு நிறைவேற்றியது. இது நமது நாட் டில் உள்ள முஸ்லிம் உள்ளிட்ட இதர மதத்தினருக்கு குடியுரிமை மறுக்கும் செயலாகும். அதா வது குடியுரிமை திருத்தச் சட் டத்தின்படி இதுபோன்று குடி யேறிய முஸ்லிம் கள் உள்ளிட்ட இதர பிரிவினர் குடி யுரிமை கோரி விண்ணப்பிக்கக் கூட முடியாது.
நமது நாட்டை ஒட்டியுள்ள அயல் நாடுகளில் இருந்து அங் குள்ள சிறுபான்மையினர் ஏராளமானோர் நமது நாட் டுக்கு வருகின்றனர். பாகிஸ் தானில் உள்ள அக மதிய முஸ்லிம்கள் அங்குள்ள சிறுபான் மையினராவர். ஆப்கானிஸ் தானில் ஹசாரா, மியான்மரில் ரோஹிங்கியா, இலங்கையில் தமிழ் வம்சாவழியினர் உள்ள னர். ஆனால் இவர்களை எல்லாம் குடி யுரிமை திருத்தச் சட்டம் விலக்கி வைத்துள்ளது. ரோஹிங்கியா அகதிகள் குறித்த செய்திகளை இப்போதும் நாம் செய்திகளில் பார்த்து வருகிறோம். அந்த அகதிகளை நாடுகடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை ஒன்றிய அரசு அணுகியுள்ளது. இத்த கைய நிலைப்பாட்டை ஒன்றிய அரசு மேற்கொள்கிறது. குடி யேறிய முஸ்லிம்களின் குடி யுரிமையை சட்டவிரோதம் ஆக்குவது இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தின் லட்சிய மாகும்.
உலகில் எந்த நாட்டிலுமில்லை
இது நமது அரசமைப்பு சாசனத்தை அப்பட்டமாக மீறுவதும், எதிரானதுமாகும். மதச்சார்பின்மைக்கும், அக திகள் குறித்த அணுகுமுறைக்கும் உட்படாததா கும். உலகத்தில் எந்த ஒரு நாடும் அகதிகள் குடியேற்றத்தை மத அடிப் படையில் பிரித்து வைப்ப தில்லை. நம் நாட்டில் மட்டுமே அகதி களை மத அடிப்படையில் பாகு படுத்தும் நிலை உள்ளது. அதனால் தான் இந்த குடியு ரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக அய்க்கிய நாடுகள் சபை வெளிப்படையாக கருத்து தெரிவிக்க வேண்டி வந்தது. மேலும் “ஆம்னஸ்டி இன்டர்நேசனல்” தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் நிலை ஏற்பட்டது. இப் போது அமெரிக்காவின் விருப்பத் தோழராக நரேந்திர மோடி உள்ளார். அமெரிக்காவை அனைத்து விதத்திலும் ஆதரிக்கும் நிலையில் இந்தியா உள்ளது. அதன் ஒரு பகு தியாக அமெரிக்காவின் ராஜதந்திர நட்பு சக்தியாக இந்தியாவை மோடி அரசு மாற்றியுள்ளது. ஆனாலும், இந்த (சிஏஏ) தவறான நட வடிக்கையை அமெரிக்கா கூட நிரா கரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. இது சரியல்ல என்று அமெ ரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் இந்தியாவை குற்றம்சாட்டுகின் றன. நமது நாடு உலகத்தின் முன்பு தனி மைப்பட்டிருக்கிறது” என பின ராயி விஜயன் கூறினார்.