பழிவாங்கும் நடவடிக்கையா? திரினணாமுல் காங்கிரஸ் மேனாள் எம்.பி. வீட்டில் சி.பி.அய். சோதனை

viduthalai
1 Min Read

கொல்கத்தா, மார்ச் 24 நாடாளுமன்றத்தில் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மேனாள் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த் ராவின் வீட்டில் சிபிஅய் நேற்று (23.3.2024)சோதனை நடத்தியது.மஹுவா மொய்த்ராவுடன் தொடர் புடைய கொல்கத்தாவில் உள்ள வேறு இடங்களிலும் சிபிஅய் சோதனை நடத்தியது. லோக்பால் ஆணைய உத்தரவால் இந்த நடவ டிக்கை மேற்கொள்ளப் பட்டது.
மேற்கு வங்கம் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மஹுவாமொய்த்ரா. இவர் அதானி குழுமம் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் மக்களவையில் 50 கேள்விகள் எழுப்பியுள்ளார். இத்தகைய கேள்விகளை எழுப்ப ரூ.2 கோடி வரை அவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிரா நந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இதுதொடர்பான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணையில் மஹுவா மொய்த்ரா கடந்த டிசம்பரில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
“லோக்பால் பிரிவு” 20(3)(ஏ)-ன் கீழ் இது தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளை விசாரித்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஅய்க்கு ‘லோக்பால்’ ஆணையம் கடந்த 15-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி மஹுவா மொய்த் ராவின் வீடு மற்றும்அவருடன் தொடர்புடைய பல இடங்களில் சிபிஅய் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *