விடுதலை வளர்ச்சி நிதி

0 Min Read

நன்கொடை
தமிழ்நாட்டில் வாழும் 68 DNT சமூகங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த இரட்டைச் சான்றிதழ் முறை ஒழிக்கப்பட்டு DNT ஒற்றைச் சான்றிதழ் வழங்கிட உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சீர் மரபினர் சமுதாய மக்களின் கோரிக்கையை கொண்டு சேர்த்து வெற்றி பெறச் செய்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் செந்தில்குமார் ராமராஜ் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூ.5000 வழங்கி நன்றி தெரிவித்துக் கொண்டார். (23.03.2024, பெரியார் திடல்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *