கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

22.11.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

👉 அர்ஜெண்டினா நாட்டின் தலைவராக வலது சாரி சிந்தனையாளர் ஜாவியர் மிலய் வெற்றி.

👉குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்: ராஜஸ்தான் காங். தேர்தல் அறிக்கை

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து பீகாரில் இடஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்தி அரசிதழில் வெளியீடு: நிதிஷ் அரசு நடவடிக்கை.

👉 மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் வெறுப்பை பரப்பும் ஆர்எஸ்எஸ்-பாஜக, ராகுல் விமர்சனம்.

👉 ஜாதிவாரி கணக்கெடுப்பு சமூக சமத்துவத்தை வளர்க்கும் என்று ஆந்திராவின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பேச்சு.

தி டெலிகிராப்:

👉யோகா குரு ராம்தேவ், பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்பு மூலம் பல்வேறு நோய்களுக்கு நிரந்தர நிவாரணம் வழங்குவதாக பொய்யான விளம்பரங்களுக்காக ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉 பிரதமரின் மோடி ஜாதிப்பிரிவு ‘திருட்டுத்தனமாக’ ஓபிசி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது என்கிறார் கார்கே. ஜாதிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் மோடியின் தற்போ தைய நிலைப்பாட்டிற்கு முரணானது என்றும் கண்டனம்.

👉 கடும் எதிர்ப்பின் காரணமாக ’பார்ப்பனர்களுக்கு மட்டும் தகனம் செய்யும் சுடுகாடு’ என்கிற பலகையை அகற்றியது ஒடிசா மாநில கேந்திரபாடா நகர நிர்வாகம்.

👉 தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் உள்ள அனைத்து எம்பிபிஎஸ் இடங்களும்  நிரப்பப்பட்டன, அரசு அறிவிப்பு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *