உரத்தநாடு வடக்கு ஒன்றியம் காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் ‘இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்?’ தெருமுனைக் கூட்டம்

viduthalai
2 Min Read

உரத்தநாடு, மார்ச் 21– 16.03.2024 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு உரத் தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் அன்னை மணியம்மையார் 46ஆவது நினைவு நாள் தெருமுனை கூட்டம் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? என்ற தலைப்பில் நடை பெற்றது. உரத்தநாடு ஒன்றிய இளைஞரணி செயலாளர் சு.குமரவேல் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே.இராஜ வேல் தலைமையேற்று உரையாற்றினார்.
உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா. துரைராசு, வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப் பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் திமுக கிளைச் செயலாளர் கோ.ரவி, காங்கிரஸ் வட்டார பொருளாளர் இரா.சிவகுரு, ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.

மாநில வீதி நாடக கலைக் குழு அமைப்பா ளர் பி.பெரியார்நேசன், திமுக மாவட்ட பிரதிநிதி ரமேஷ், தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் மா.மதியழகன், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, திருவோணம் ஒன்றிய செயலாளர் தலைமைக் கழக பேச்சாளர் சில்லத்தூர் சிற்றரசு, தலைமை கழக அமைப்பா ளர் குடந்தை க.குருசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

தஞ்சை மாவட்ட தலை வர் சி.அமர்சிங் தொடக்க உரையாற்றினார், தலை மைக் கழக பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
திமுக மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் த.குண சேகரன், கோவிலூர் வெ.முருகேசன், காங்கிரஸ் கிளைக் கழகத் தலை வர் த.குமரேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.இராமதாஸ், உரத்தநாடு நகர இளைஞரணி தலை வர் பொறியாளர் ச.பிர பாகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்ரமணியன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஆ.பிரகாஷ், வடக்கு ஒன் றிய இளைஞரணி துணைச் செயலாளர் இரா.இராஜ துரை, மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர் பா.விஜயகுமார், நெல்லு பட்டு கிளைக் கழக செயலாளர் க.மாணிக்கம், தெற்கு நத்தம் அன்பழ கன், கவரப்பட்டு சேகர், திமுக தோழர்கள் சுப்பிரமணியன், பாக்கியராஜ், நடுவூர் சம்பந்தம் உள் ளிட்ட கழக பொறுப்பா ளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *