சிக்குவாரா ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்?

1 Min Read

மதத்தின் பெயரால் வாக்கு சேகரிப்பு: தி.மு.க. சார்பில் புகார்

சென்னை,மார்ச் 20– ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதத்தின் பெயரால் வாக்கு சேகரித் ததாக திமுக சார்பில் புகார் அளிக் கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் புகாரை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு விடம் வழங்கிய திமுக வழக்குரைஞர் சரவணன் கூறிய தாவது:
கடந்த மார்ச் 16ஆம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த பின், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற ஒரு விழாவில் பங் கேற்று மதத்தின் பெயரால் ஓட்டு கேட்டிருக்கிறார்.
அந்நிகழ்வில் பேசிய அவர், “நமது கோயிலையே அழிக்கக் கூடிய, நமது மதத்தையே அழிப் பேன் என்று சொல்லக்கூடிய கட்சிக்கு எல்லாம் ஏன் ஓட்டு போடுகிறீர்கள்” என்று கூறியிருக்கிறார்.
தேர்தல் விதியின்படி மத ரீதி யில் ஓட்டு கேட்கக் கூடாது. இதன் மூலம் அவர் தேர்தல் விதியை மீறியிருக்கிறார்.
அதேபோல மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப் படையில் மதத்தின் பெயரால் பிரச்சாரம் செய்யக் கூடாது என்ற விதிமுறையையும், நிர்மலா சீத்தா ராமன் மீறியிருக்கிறார்.
இந்த சட்டமீறல்களுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *