கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக திராவிடர்கழகக் கொடியேற்றுவிழா நிகழ்ச்சி நாகர்கோவில், ஒழுகினசேரி தந்தை பெரியார் மய்யத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கழக குமரி மாவட்டத் தலைவர் மா.மு.சுப் பிரமணியம் தலைமை தாங்கினார்.
கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், கழகப் பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், கழக மாவட்டத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், மாநகர கழக தலைவர் ச.ச.கருணாநிதி, பொன்.பாண்டியன், கோட்டாறு பகுதி கழக தலைவர் ச.ச.மணிமேகலை கழக தோவாளை ஒன்றிய தலைவர் மா.ஆறுமுகம் உள்பட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். கழக தோவாளை ஒன்றிய செயலாளர் ந.தமிழ் அரசன், கழக இலட்சிய கொடியினை ஏற்றிவைத்தார்.
கழகக் கொடியேற்றுவிழா

Leave a Comment