கவிஞர் ஈரோடு தமிழன்பன் 90ஆம் அகவைத் தொடக்க விழா

Viduthalai
1 Min Read

சென்னை, செப்.27-உலகறிந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் தொண்ணூறாம் அகவைத் தொடக்க விழா 28.9.2023 அன்று சென்னை, கோட்டூர்புரம் தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கில் பிற்பகல் 3 மணி தொடங்கி நடைபெறு கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3.8.2023  அன்று வெளியிட்ட ஈரோடு தமிழன்பன் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் நிகழ்ச்சிக ளின் நிறைவில் திரையிடப்படுகிறது.

இந்நிகழ்வில்   கவிஞர் திரைப்படப் பாடலாசிரியர்  யுகபாரதி தலைமையில் கவிஞர்கள் தமிழமுதன், தமிழ்மணவா ளன், கு.தென்னவன் ஆகியோர் கலந்து கொள்ள, கவிஞர் கவிமுகில் வரவேற் புரை ஆற்றுகிறார்.

வேலூர் வி.அய்.டி.பல்கலைக் கழக நிறுவுநர் கோ. விசுவநாதன் தலைமை யில் நடைபெறும். வாழ்த்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, சிகரம் செந்தில்நாதன், ரகமத் அறக்கட்டளை முஸ்தபா, தஞ்சை பாரத் கல்வி நிறுவன புனிதாகணேசன் ஆகியோர் பங்கேற்கப் பேராசிரியர் இராம.குருநாதன் வரவேற்புரை ஆற்று கிறார்.

ஈரோடு தமிழன்பனின் 83 கவிதை நூல்களைத் திரட்டிப் புதுவை அமிர்த கணேசன் வெளியிட்டுள்ள “எரிதழலும் இளங்காற்றும்Ó என்னும் பெருந் தொகுப்பையும், மற்றொரு நூலாகிய அமிர்த கணேசன் எழுதியுள்ள “நம் கால மகாகவி” என்னும் நூலையும் நீதிபதி ச.ஜெகதீன் வெளியிட மக்க ளவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி பெறுகிறார்.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் ய.மணிகண்டன் ஆய்வுரை நிகழ்த்து கிறார்.

திராவிடர் கழக பிரச்சாரச் செயலா ளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி வரவேற்புத் தொடக்கவுரை ஆற்றுகிறார்.

இப்பெருவிழாவை வடஅமெரிக்க ஈரோடு தமிழன்பன் வாசகர் பேரவை, கவிக்கோ மன்றம் சென்னை, மகாகவி ஈரோடு தமிழன்பன் கலை இலக்கியப் பேரவை சென்னிமலை, கவிமுகில் அறக்கட்டளை சென்னை, தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர் சங்கம் சென்னை, கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் சென்னை, ஒருதுளிக் கவிதை புதுவை, கண்டியார் பதிப்பகம் நியூ யார்க் அமெரிக்கா, விழிகள் பதிப்பகம் சென்னை ஆகியன இணைந்து நடத்து கின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *