80 தொகுதி இருக்கும் உத்தரப்பிரதேசத்துக்கும், 40 தொகுதி இருக்கும் பிகாருக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. 39 தொகுதி இருக்கும் தமிழ்நாட்டுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்தி முடிக்கும் அளவுக்கு கட்டமைப்பை வைத்திருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். கேள்வி அது இல்லை…
எல்லா மாநிலங்களையும்விட அண்மைக் காலத்தில் பிரதமர் மோடி அதிகம் தமிழ்நாட்டுக்கு வந்து பிரச்சாரம் மேற்கொண்டது ஏன்? என்ற கேள்விதான் முக்கியமானது. முதல் கட்டத்தில் தமிழ் நாட்டுக்குத் தேர்தல் வருகிறது என்று தெரிந்துதானே மோடியின் பிரச்சாரம் அப்படி திட்டமிடப்பட்டிருக் கிறது? அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண் டிய, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட தேர்தல் ஆணையம், தேர்தல் தேதிப் பட்டியலை வெளியிடும் முன்பே மோடிக்கும், ஒன்றிய அரசுக்கும் எப்படி இந்தத் தகவல் தெரியவந்தது? தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மைதான் நாடு முழு வதும் எழுந்திருக்கும் ஒரே கேள்வி.
ஒரே கேள்வி!
Leave a Comment